Tuesday, June 2, 2009

வந்த கனவு -2

riday, May 29, 2009

இன்று விடியற்காலை வந்த இந்த கனவும் ஒரு வித்தியாசமானது தான். விழிப்பு வந்த நேரமோ காலை 4 மணி. இது ஒரு மதக்கனவு. " நன் மக்கட்பேரவை" என்ற ஒரு அமைப்பு, இது வெளிநாட்டு கிருத்துவ அமைப்புகளிடமிருந்து பணம் மற்றும் பொருட்களைப் பெற்று இங்குள்ள வருவாய் குறைந்த அடித்தட்டு மக்களுக்கு பொருட்களையும் பணத்தையும் கொடுத்து மெதுவாக மதமாற்றம் செய்து வருகின்றார்கள். ஒரு சமயம் அதைப் பற்றி "இந்து சேவை சங்கம்" என்ற அமைப்பிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. அதற்கு அவர்களோ, வெளிநாட்டிளிருந்து கையேந்தி பிச்சை எடுத்து, நம் நாட்டினரை பிச்சைக்கார ர்களாயும், சோம்பேறிகளாகவும் மாற்றி தங்கள் தேவைகளை பெருக்கிக் கொள்ளும் கூட்டமென சாடுகிறார்கள். இதைக் கேள்விப் பட்ட நன்மக்கட்பேரவையோ, நீங்கள் செய்திருந்தால் நாங்கள் வெளிநாட்டிலிருந்து வாங்கமாட்டோமே என குறைக் கூறுகிறார்கள். நாங்கள் செய்தால் உங்களுக்கு வருமானம் கிடைக்காது. நீங்கள் சேவை செய்கிறோம் என்ற பெயரில் செல்வம் சேர்க்கவோ, உல்லாசமாக இருக்கவோ முடியாது. ஆகவேதான் நீங்கள் வெளிநாட்டுக்கார ர்களை நாடுகிறீர்களே தவிர வேறொன்ருமில்லையென திருப்பி பதிலலிக்க, இப்படியே விவாதம் நீண்டுக் கொண்டு போகிறது. இதில் சில பலமான வார்த்தை பிரயோகங்கள் நடக்கின்றபோது விழிப்பு வந்து விட்டது. இந்த கனவு எதனால் வந்தது? இது போன்ற பெயரில் அமைப்புகள் உள்ளனவா? ஒன்றுமே புரியவில்லை. அப்படிபட்ட அமப்புகள் இருப்பின் என்னை மன்னிக்க. கனவில் வந்ததை இதில் பதித்திருக்கிறேன். இரு சாரா ரும் பயன்படுத்திய மேலும் சில கடுமையான வார்த்தை பிரயோகங்களை பதிபிக்கவில்லை

இன்னொரு வித்தியாசமான கனவை அடுத்தில் பார்ப்போமா..

No comments: