Friday, June 29, 2007

ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 3

இந்தியாவின் 94 வருட திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக வாய் பேச முடியாத, காது கேளாத வாலிபர் ஒரு ஹீரோவாக நடித்துள்ளார். அவரது செயல் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் ஆரம்ப கால திரைப்படங்களில், சொந்தக் குரலில் பேச, பாட தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும். ஏனெனில் படப்பிடிப்பு தளத்திலேயே, படம் பிடிக்கும் போதே
பேசுவது, பாடுவது பதிவு செய்தாக வேண்டும். தற்போதைய நடைமுறை படி நடிப்பவர்களுக்கு அழகு மட்டும் இருந்தால் போதும், பிறகு டப்பிங் என்னும் முறையில் வேறொருவர் குரலை பதிவு செய்து விடுகிறார்கள். எப்படியிருப்பினும் படப்பிடிப்பின் போது வசனங்களுக்கு ஏற்றவாறு வாய் அசைத்தாக வேண்டும். அதற்கு காது கேட்க வேண்டுமே.
கர்நாடக தொழிலதிபரும், நடிகருமான சுரேஷ் சர்மாவின் இரண்டாவது மகன் துருவ் பிறப்பிலேயே காது கேளா, வாய் பேசா குறையுடையவர். தற்போது 25 வயதாகிறது. ஆசிரியர்கள் கூறுவது புரியாததால் PUC படிக்கும் போது கல்லூரி வாழ்வை துறந்தார். பிறகு கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். 2005 ஆண்டு நடந்த காது கேளாதோர் உலக கோப்பை கிரிக்கெட் பங்கேற்றார். ஒரு தணியாத தாகம் துருவை வாட்டிக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் தந்தையுடன் டப்பிங் தியேட்டருக்கு சென்றிருந்த போது, அங்கு திரைப்படத்தை ஓடவிட்டு, திரையில் நடிக்கும் நடிகர்களின் வாய் அசைப்பிற்கு ஏற்ற வகையில் டப்பிங் பேசுவதை பார்த்த துருவ் பரபரப்புஅடைந்தார். தன்னாலும் நடிக்க முடியும் என்ற எண்ணம் தோன்றியவுடன், தந்தையிடம் வெளியிட, அவர் ஜோக் எனக்கருதி அந்த விசயத்தை நிராகரித்து விட்டார். சுரேசின் நண்பரும், திரைப்பட தயாரிப்பாளருமான சித்தராமுவுக்கு துருவின் விருப்பம் தெரியவர, வசனத்தை புரிந்து வாய் அசைக்க வைத்தால் போதுமானது என கூறி, துருவ் ஹூரோவாக நடிக்க சினேகாஞ்சலி என்ற கன்னடதிரைப்படம் தயாரிக்கி வருகிறது. அடுத்த நாளுக்கான வசனத்தை முதல் நாள் இரவே தந்தை விளக்கி கூறிவிட, முதல் நாள் தடுமாறினாலும் பிறகு மற்றவர்கள் கூறுவதை விரைவாக புரிந்துகொள்வதாகவும், வசனத்திற்கேற்றபடி சர்யான நேரத்தில் வாய் அசைப்பதாகவும் திரைப்படக் குழுவினர் வியப்புடன் கூறுகிறார்கள். அவர் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துவதுடன்,நாமும் ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து.

ஏக்கங்கள்-1 (அரசியல் அல்ல !! )

தமிழகத்தில் காது கேளாதவர்களுக்கு இரு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வழங்க முன்வரவேண்டும், என டில்லியில் உள்ள காது கேளாதவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பின் சார்பில், தமிழ் மாநில காது கேளாதவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் சென்ற ஜுன் 24 \2007 அன்று சென்னையில் நடந்துள்ளது. அமைப்பின் தேசிய செயளாளர் நாராயணன் தலைமையில், துணைத்தலைவர். சோனின் சின்கா, பொருளாளர் சந்தீப், சைகைமொழி பெயர்பாளர் சுந்தர் ஆகியோருடன் சென்னை,திருச்சி,தஞ்சாவூர், காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் உருப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
1) தமிழக ஊனமுற்றோர் ஆணையக் குழுவில், காது கேளாதவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூற ஒரு பிரதிநிதி நியமிக்கவும், 2) வேலை வாய்ப்பில் காது கேளாதவர்களுக்கும் முன்னுரிமைத் தரவேண்டும், 3) வாகன லைசென்ஸ் பல நாடுகளில் வழங்குவது போல, தமிழகத்திலும் லைசென்ஸ் வழங்க உத்திரவு பிறப்பிக்க வேண்டும், 4) ஆந்திராவில் உள்ளது போல, தமிழகத்திலும் காது கேளாதவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், 5) காது கேளாதவர்கள் பள்ளிகளில் சைகை மொழிகளையும் கற்பிக்கும் வகையில் ஆசிரியர்கள் நியமிக்கப் படவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக அறிகிறோம்.
நன்றி::சென்னை. தினமலர் நாளிதழ். 25\6\07.
=========================================
அரசியல் அல்ல !!

இதனை அரசியல் பிரச்சனையாக கருதாமல், தமிழகத்தில் உள்ள காது கேளாதவர்களுக்கு, அவர்களின் கோரிக்கைகளை தகுந்தவர்களுடன் கலந்தாய்ந்து, தேவையான உத்தரவுகளை வழங்கி உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.
==========================================

Tuesday, June 26, 2007

ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 2

மன வலிமையால் விதியை வெல்லும் சிவராமன்

திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன். இவர், டில்லி இ.எஸ். இ., அலுவலகத்தில் தட்டெழுத்தராக வேலைப் பார்த்து வந்த போது, இரு சக்கர வாகன விபத்தில் முதுகெழும்பு ஒடிந்ததில்,இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் செயல்படாமலும், முதுகெழும்பில் புற்றுநோயும் தாக்கியதால், படுத்த படுக்கையாகிவிட்டார்.
இரு சக்கர நாற்காலியில் கூட உட்கார முடியாத நிலையில், தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார். வருங்கால வாழ்க்கையைப் பற்றி யோசித்தவேலையில் மனவலிமையுடனும், மருத்துவர்களின் உதவியுடனும் உட்கார முயற்சி செய்து வெற்றிக் கண்ட அவர், கை, கால் இல்லாதவர்கள் கார் ஓட்டுவதை நாளிதழ்களில் படித்து அறிந்து, மலப்புரத்திலுள்ள முஸ்தபா என்னும் கார் மெக்கானிக்கை அழைத்து, தன்னுடைய காரில் உட்காரும் போது, பக்கவாட்டில் சரிந்து விடாதிருக்கவும், கையை மட்டுமே பயன் படுத்தி கார் ஓட்டவும் தேவையான மாற்றங்களை வடிவமைத்து, கடும் முயற்சிக்கு பின் நல்ல முறையில் கார் ஓட்டத் துவங்கி விட்டார்.
காரில் அமர்வதற்கு மட்டும் மகனின் உதவியை நாடுவதாகவும், அலுவலகத்தில் பணிபுரியும் மனைவியை தினமும் காரிலே அழைத்துச் செல்வதாகவும், மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது தனி ஆளாக சென்னை வரை கார் ஓட்டி வந்ததாக அறிகிறோம், இவரின் மனவலிமையைக் கண்டு கேரள மக்களுடன் நாமும் அதிசயம் அடைகிறோம்.
****
இவர்களைப் போன்றவர்களைப் பார்த்தாவது நாமும் ஊக்கம் பெறுவோம்.
******

Friday, June 22, 2007

எனக்கும் !!!!!!!!!!-6

மேலும் எனது கவிதைகள் மூலமாகவும், தமிழ் இணையதளங்கள் மற்றும் வலைப்பதிவுகளின் மூலமாகவும் அறிமுகமானவர்களைப் பற்றி ஒரு தனி குறிப்பு வரைய நினைத்துள்ளேன். அதனால் என்னுடைய வரலாறுக்கு போவோமா?
நம்ம குடும்பம் ரொம்ப பெறுசுங்க! ஆமாங்க!! எங்க பெற்றோருக்கு மொத்தம் 10 வாரிசுங்க. அதிலே 6 பொண்ணுகளுக்கு பின்னாடி ஏழாவதா தவமிருந்து பெத்ததாலே எனக்கு, நானே வெச்சுகிட்ட பெயருங்க 'தவப்புதல்வன்'. பொண்ணுங்களிலே ஒரு அக்கா நான் பொறக்கறத்துக்கு முன்னாடியே காலமாயிட்டாங்க. அதுவொரு தனி கதைங்க. எங்க குடும்பம் வியாபாரக்குடும்பங்க.

Wednesday, June 20, 2007

எனக்கும் !!!!!!!!!!-5

கம்போஸ் தமிழ்.காமில் கவிதைகள் தலைப்பிலே{Badrinarayanan.A}என்ற பெயரில் சில கவிதைகளையும் எழுதியுள்ளேன். நான் தெரிந்துக் கொள்ளும் தமிழ் வலைப்பதிவுகளை, மற்றவர்களும் அறிந்துக் கொள்ளட்டும் என்கின்ற ஆர்வத்தினால் வலையப்பா மற்றும் அரட்டை பகுதிகளிலும் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். அந்த சமயத்தில் அறிமுகமானவர்தான் நண்பர் திரு. பால சுப்ரமணியம் கணபதி. இவர் ஆங்கிலத்தில் (http://madscribblings.blogspot.com) என்ற வலைப்பதிவை இயக்கி வந்தவர், என்னுடைய தமிழ் வலைப்பதிவை அறிந்ததும், அதன் பற்றிய விபரங்களை விரைவிலே சேகரித்து தமிழிலும் (http://madscribbler-kirukan.blogspot.com/) 'கிறுக்கல்கள்' என்ற வலைப்பதிவை சிறப்பாக துவங்கியிருக்கிறார் ( இது மட்டும் போதுமா? இன்னும் கொஞ்சம் சொல்லட்டுமா ? பாலசுப்ரமணியம் கணபதி). பிறகு தொடர்வோமே.....

Saturday, June 16, 2007

ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 1

பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் 5 உடல் ஊனமுற்றவர்கள் இணைந்து ஒரு வருடத்திற்கு முன் அங்கு செயல்பட்டு வருகின்ற ' ஹை-கிளாஸ்' அமைப்பு மூலம் தொழிற்ப்பயிற்சிப் பெற்று, மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் ரூ.10 ஆயிரம் மான்யத்துடன் ரூ.25 ஆயிரம் கடன் பெற்று கடலைமிட்டாய் மற்றும் தின்பண்டங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.

மேலும் தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்ததில், மனு பரிசீலனை செய்யப்பட்டு, மேலும் ரூ.50 ஆயிரம் அரசு சார்பிலும், ரூ.50 ஆயிரம் 'ஹை-கிளாஸ்' அமைப்பு சார்பிலும் நிதி ஒதுக்கி வழங்கப்பட்டுயுள்ளது. இவர்கள் தயாரிக்கும் பொருட்களை கேரளாவுக்கு விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கென தனி கட்டடம் கட்டி, மெழுகுவத்தி மற்றும் பிற தொழில்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளதாக அறிந்தோம். உயர்ந்த
நிலை அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், தரமான பொருட்களை தயாரித்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Friday, June 15, 2007

எனக்கும் !!!!!!!!!!-4

கம்போஸ் தமிழ்.காமின் படைப்பாளிகளையும் விமர்சகர்களையும் தான், எந்த ஒரு கட்டுபாடுகளுமற்ற, சுதந்திரமான வாய்ப்பிருந்தும் நடைமுறைக்கு ஒவ்வாத விசயங்களை தவிர்த்து, கம்போஸ தமிழ்.காம் இணையத்தளத்தை பயன்படுத்தி எழுதி வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது. கம்போஸ் தமிழ்.காம் நிர்வாகிகளையும், படைப்பாளிகளையும்,அவர்களின் படைப்புகளும் மேலும் பல்வேறு வசதிகளுடனும் பகுதிகளுடனும் விரிவடையவும் வாழ்க! வெல்க!! என மகிழ்ச்சியுடன் வாழ்த்தி பயணத்தைத் தொடர்கிறேன்.

பின் குறிப்பு..\\compose tamil நம்மையும் அறிமுகப்படுத்தியுள்ளதே....அதையும் குறிப்பிடுங்களேன்....madscribbler said... \\

Dhavapudhalvan said...
file://எண்ணங்களின்// வேகத்தை ஈடு செய்ய வடிப்புகளால் முடியவில்லையே.

Thursday, June 14, 2007

எனக்கும் !!!!!!!!!!-3

அட! இது என்ன சுயசரிதையா ? இருக்கக்கூடாதா! என்னையும் தெரிந்துக் கொள்ளட்டுமே 4 பேர். எனது சகோதரன், நான் தமிழில் எழுத,படிக்க, மற்றவருடன் அளவுலாவ, ஒரு இனியத் துவக்கத்தை அறிமுகம் செய்து வைத்ததுதான் கம்போஸ் தமிழ்.காம் (http://www.composetamil.com/) நம்மை பதிவு செய்துக் கொள்ளவும்,
இயக்கவும் தமிழில் சுலப வழிகளும், நமது எண்ணங்களை உடனுக்குடன்,
எந்த கட்டுபாடுமில்லாமல் வெளியிடவும் வாய்ப்பளித்துள்ள கம்போஸ் தமிழ்.காம் (http://www.composetamil.com/ ) நிர்வாகிகளுக்கு, இந்த நேரத்தில் நன்றி கூறக் கடமைப்
பட்டிருக்கிறேன். ஏனென்றால் பல்வேறு இணையதளங்களில் நிர்வாகிகளின்
ஒப்புதல் பெற்றப்பின் தான் நம் பதிப்புகள் வெளியிடப்படுகிறது. இச்சமயத்தில்
மற்றொன்றையும் தவறவிடக்கூடாது. அதாவது.......

Friday, June 8, 2007

எனக்கும் !!!!!!!!!!-2

சுமார் 13 வருடங்களுக்கு முன்பு வாழ்விலே சாதனையோட்டம் என நினைத்து சோதனை ஓட்டத்தைத் துவங்கினேன். பிறந்து வளர்ந்த ஊரை விட்டு மாநகருக்கு குடிப்பெயர்ந்து, 3 வருடங்களுக்கு முன் வீட்டிலேயே கணனியை வாங்கிய பிறகு, மீண்டும் அதனுடனான தொடர்பு புதுபிக்கப் பட்டது. மீண்டும் அதில் விளையாட்டுக்கள் தான். இணையத்தொடர்பு பெற்றபின் சிறிது மாற்றம். E Mail முகவரியை துவக்கிக்கொண்டு, Forward Messages அனுப்பிக் கொண்டிருந்தேன். நமக்குத்தான் போதுமான ஆங்கில அறிவு இல்லாதது தெரிந்த விசயமாயிற்றே ! . கணனியை தமிழிலும் பயன்படுத்தலாம் என்பதை முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் எப்படி உபயோகிப்பது என தெரியாததால் எனது மகள்களிடம் அதைப்பற்றி குடைந்துக்கொண்டே இருந்தேன். இதனால் எனது மகள் தமிழில் படிப்பதற்கு' நிலாசாரல்' இணையதளத்தினை எனக்கு அறிமுகம் செய்து கொடுத்தாள். ஆனால் என் கருத்துக்களை (படைப்புகளை) வெளியிட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது.........

எனக்கும் !!!!!!!!!!-1

எனக்கு ஆசைதாங்க! ஏதோதோ எழுத நினைக்கிறேன், எது முதலில் எழுதுவதுயென தெரியாமல். சுமார் 15 வருடத்துக்கு முன்னாலேயே எனது சகோதரரின் அலுவலகத்தில் கணனியின் அறிமுகம் ஆனது. போதுமான ஆங்கில அறிவு இல்லாததால் ' பட்டிகாட்டான் மிட்டாய் கடையை வாய் பிளந்து பார்த்துப் போல' நானும் பார்த்துக் கொண்டிருந்தேன் கணனியின் இயக்கங்களையும் இயக்குவதையும். எவ்வளவு நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருப்பது?. சோர்ந்து போய் உட்கார்ந்தபடியே கண்களை மூடி,வாயை பிளந்து விடுவேன். அதைப் பார்த்து எனது சகோதரனும், 'அண்ணா, உங்களுக்குத்தான் செஸ் விளையாடத்தெரியுமே! கணனியுடன் விளையாடுங்களென சொல்லிக்கொடுத்தான். அன்று தான் முதல்முதலாக கணனியுடன் தொடர்பு ஏற்பட்டது. On/Offசெய்வதற்கும், செஸ் விளையாட்டை கண்டுபிடித்து இயக்குவதற்கும், இடையில் ஏற்படும் தடங்கல்களை நீக்குவதற்கும் அலுவலக உதவியாளர்களை அடிக்கடி தொந்தரவு செய்தேன்.
பிறகு.......

Thursday, June 7, 2007

தெரியாததை.........!!!!!!!!!

ஹல்லோ ! தெரியாததை தெரித்துக் கொள்வோமே 4 பேரிடம். நல்லதை மட்டும். அனுப்புங்களேன் உங்களுக்கு தெரிந்ததை.

வாழ்க! வளமுடன்!!

அன்புடன்,
அம்பி.
07/06/2007.