Friday, June 29, 2007

ஏக்கங்கள்-1 (அரசியல் அல்ல !! )

தமிழகத்தில் காது கேளாதவர்களுக்கு இரு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வழங்க முன்வரவேண்டும், என டில்லியில் உள்ள காது கேளாதவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பின் சார்பில், தமிழ் மாநில காது கேளாதவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் சென்ற ஜுன் 24 \2007 அன்று சென்னையில் நடந்துள்ளது. அமைப்பின் தேசிய செயளாளர் நாராயணன் தலைமையில், துணைத்தலைவர். சோனின் சின்கா, பொருளாளர் சந்தீப், சைகைமொழி பெயர்பாளர் சுந்தர் ஆகியோருடன் சென்னை,திருச்சி,தஞ்சாவூர், காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் உருப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
1) தமிழக ஊனமுற்றோர் ஆணையக் குழுவில், காது கேளாதவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூற ஒரு பிரதிநிதி நியமிக்கவும், 2) வேலை வாய்ப்பில் காது கேளாதவர்களுக்கும் முன்னுரிமைத் தரவேண்டும், 3) வாகன லைசென்ஸ் பல நாடுகளில் வழங்குவது போல, தமிழகத்திலும் லைசென்ஸ் வழங்க உத்திரவு பிறப்பிக்க வேண்டும், 4) ஆந்திராவில் உள்ளது போல, தமிழகத்திலும் காது கேளாதவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், 5) காது கேளாதவர்கள் பள்ளிகளில் சைகை மொழிகளையும் கற்பிக்கும் வகையில் ஆசிரியர்கள் நியமிக்கப் படவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக அறிகிறோம்.
நன்றி::சென்னை. தினமலர் நாளிதழ். 25\6\07.
=========================================
அரசியல் அல்ல !!

இதனை அரசியல் பிரச்சனையாக கருதாமல், தமிழகத்தில் உள்ள காது கேளாதவர்களுக்கு, அவர்களின் கோரிக்கைகளை தகுந்தவர்களுடன் கலந்தாய்ந்து, தேவையான உத்தரவுகளை வழங்கி உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.
==========================================

No comments: