Tuesday, June 26, 2007

ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 2

மன வலிமையால் விதியை வெல்லும் சிவராமன்

திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன். இவர், டில்லி இ.எஸ். இ., அலுவலகத்தில் தட்டெழுத்தராக வேலைப் பார்த்து வந்த போது, இரு சக்கர வாகன விபத்தில் முதுகெழும்பு ஒடிந்ததில்,இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் செயல்படாமலும், முதுகெழும்பில் புற்றுநோயும் தாக்கியதால், படுத்த படுக்கையாகிவிட்டார்.
இரு சக்கர நாற்காலியில் கூட உட்கார முடியாத நிலையில், தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார். வருங்கால வாழ்க்கையைப் பற்றி யோசித்தவேலையில் மனவலிமையுடனும், மருத்துவர்களின் உதவியுடனும் உட்கார முயற்சி செய்து வெற்றிக் கண்ட அவர், கை, கால் இல்லாதவர்கள் கார் ஓட்டுவதை நாளிதழ்களில் படித்து அறிந்து, மலப்புரத்திலுள்ள முஸ்தபா என்னும் கார் மெக்கானிக்கை அழைத்து, தன்னுடைய காரில் உட்காரும் போது, பக்கவாட்டில் சரிந்து விடாதிருக்கவும், கையை மட்டுமே பயன் படுத்தி கார் ஓட்டவும் தேவையான மாற்றங்களை வடிவமைத்து, கடும் முயற்சிக்கு பின் நல்ல முறையில் கார் ஓட்டத் துவங்கி விட்டார்.
காரில் அமர்வதற்கு மட்டும் மகனின் உதவியை நாடுவதாகவும், அலுவலகத்தில் பணிபுரியும் மனைவியை தினமும் காரிலே அழைத்துச் செல்வதாகவும், மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது தனி ஆளாக சென்னை வரை கார் ஓட்டி வந்ததாக அறிகிறோம், இவரின் மனவலிமையைக் கண்டு கேரள மக்களுடன் நாமும் அதிசயம் அடைகிறோம்.
****
இவர்களைப் போன்றவர்களைப் பார்த்தாவது நாமும் ஊக்கம் பெறுவோம்.
******

2 comments:

c g balu said...

நல்ல டானிக் -ஊக்கத்திற்கு.

Dhavappudhalvan said...

நீங்க தருவதும் ஊக்கம்தாங்க! ஆமாம் 'எழுதுவதற்கு'.