Friday, June 29, 2007

ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 3

இந்தியாவின் 94 வருட திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக வாய் பேச முடியாத, காது கேளாத வாலிபர் ஒரு ஹீரோவாக நடித்துள்ளார். அவரது செயல் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் ஆரம்ப கால திரைப்படங்களில், சொந்தக் குரலில் பேச, பாட தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும். ஏனெனில் படப்பிடிப்பு தளத்திலேயே, படம் பிடிக்கும் போதே
பேசுவது, பாடுவது பதிவு செய்தாக வேண்டும். தற்போதைய நடைமுறை படி நடிப்பவர்களுக்கு அழகு மட்டும் இருந்தால் போதும், பிறகு டப்பிங் என்னும் முறையில் வேறொருவர் குரலை பதிவு செய்து விடுகிறார்கள். எப்படியிருப்பினும் படப்பிடிப்பின் போது வசனங்களுக்கு ஏற்றவாறு வாய் அசைத்தாக வேண்டும். அதற்கு காது கேட்க வேண்டுமே.
கர்நாடக தொழிலதிபரும், நடிகருமான சுரேஷ் சர்மாவின் இரண்டாவது மகன் துருவ் பிறப்பிலேயே காது கேளா, வாய் பேசா குறையுடையவர். தற்போது 25 வயதாகிறது. ஆசிரியர்கள் கூறுவது புரியாததால் PUC படிக்கும் போது கல்லூரி வாழ்வை துறந்தார். பிறகு கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். 2005 ஆண்டு நடந்த காது கேளாதோர் உலக கோப்பை கிரிக்கெட் பங்கேற்றார். ஒரு தணியாத தாகம் துருவை வாட்டிக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் தந்தையுடன் டப்பிங் தியேட்டருக்கு சென்றிருந்த போது, அங்கு திரைப்படத்தை ஓடவிட்டு, திரையில் நடிக்கும் நடிகர்களின் வாய் அசைப்பிற்கு ஏற்ற வகையில் டப்பிங் பேசுவதை பார்த்த துருவ் பரபரப்புஅடைந்தார். தன்னாலும் நடிக்க முடியும் என்ற எண்ணம் தோன்றியவுடன், தந்தையிடம் வெளியிட, அவர் ஜோக் எனக்கருதி அந்த விசயத்தை நிராகரித்து விட்டார். சுரேசின் நண்பரும், திரைப்பட தயாரிப்பாளருமான சித்தராமுவுக்கு துருவின் விருப்பம் தெரியவர, வசனத்தை புரிந்து வாய் அசைக்க வைத்தால் போதுமானது என கூறி, துருவ் ஹூரோவாக நடிக்க சினேகாஞ்சலி என்ற கன்னடதிரைப்படம் தயாரிக்கி வருகிறது. அடுத்த நாளுக்கான வசனத்தை முதல் நாள் இரவே தந்தை விளக்கி கூறிவிட, முதல் நாள் தடுமாறினாலும் பிறகு மற்றவர்கள் கூறுவதை விரைவாக புரிந்துகொள்வதாகவும், வசனத்திற்கேற்றபடி சர்யான நேரத்தில் வாய் அசைப்பதாகவும் திரைப்படக் குழுவினர் வியப்புடன் கூறுகிறார்கள். அவர் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துவதுடன்,நாமும் ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து.

No comments: