Wednesday, July 11, 2007

எனக்கும் !!!!!!!!!!-7

எங்களுடைய தாத்தா,பாட்டி(அம்மாவின் அப்பா,அம்மா\Late. மஹாராஜ ராஜஸ்ரீ.S.ராஜகோபால் செட்டியார்,Late.ஸ்ரீமதி. செங்கவல்லி) காசி,பத்ரிநாத், கேதாரிநாத் புனிதபயணம் சென்றபோது, ஆண் வாரிசுகளே இல்லாமலிருந்த எங்கள் தாய் மற்றும் சித்திக்காகவும் (தாயின் சகோதரி.ஸ்ரீமதி.Rவிடோபாய்), ஆண்மகவு பிறந்தால் ''பத்ரி'' என்ற பெயர் வைப்பதாக வேண்டுதல் செய்துக் கொண்டு ஊர் திரும்பிய பின் சில மாதங்களில் எனது தாய் என்னையும், மேலும் சில மாதங்களுக்கு பிறகு எமது சித்தியும் ஆண்மகவுகளாகப் பெற்றெடுக்க எனக்கு ''பத்ரி நாராயணன்'' என்ற நாமகரணமும் (பெயரும்), எமது சித்தியின் மகனுக்கு
''பத்ரி குமார்'' என்ற திருநாமத்தையுமிட்டு மகிழ்ந்தார்கள். எங்கள் குடும்பம் வணிகக்குடும்பமாக இருந்தாலும், தவமிருந்து பெற்றப் பிள்ளையாகையால், ராஜா வீட்டு கன்னுக்குட்டிப் போல, கைகளில் தங்கவளையல்களும், பத்து விரல்களிலும் வளையல்களுடன் சங்கிலிகளால் இணைந்த மோதிரங்களையும், கழுத்திலே தங்கச்சங்கிலிகளும், காதிலே கற்கள் பதித்த கடுக்கண்களும், இடுப்பிலே ஆலிலை கிருஷ்ன்னுடன் கூடிய (மானத்தைக் காக்க) அரைஞாண்கொடி, கால்களில் தண்டைகளுடன் சர்வ அழங்காரத்துடன் துள்ளிக் குதித்த நாட்கள் நிழலுருவமாய் நினைவிலே நிழலாடுகிறது. நினைவிலே உள்ள துள்ளிக் குதித்த நிகழ்வுகள் அடுத்து.....

1 comment:

c g balu said...

தவ புதல்வா, அருமை!