Monday, July 16, 2007

எனக்கும் !!!!!!!!!!-9

நான் நன்றாக நடக்க ஆரம்பித்த பிறகு, சிறிது தொலைவிலிருந்த எங்கள் கடைக்கு, ஒரே ஓட்டமாக ஓடுவேனாம்,ஏனென்றால் வழியில் பார்க்கின்ற, செல்கின்ற தெரிந்தவர்கள், என்னைப் பிடித்துக் கொண்டு, என் கைகளில் இருப்பதை பிடுங்கிக் கொண்டோ அல்லது நீ போட்டிருக்கும் நகைகள் எங்களுடையது,கழட்டிக கொள்கிறோம் என்றோ, இப்படி ஏதாவது சொல்லி வேண்டுமென்றே சீண்டுவார்களாம். தவிர என்னுடைய கைங்காரியமாக, கடையிலிருந்து விற்பனைக்கு இருக்கும் சாட்டைகளில் ஒன்றை (மனிதர்களை அடிக்கும் சாட்டை அல்ல, மாடுகளை,பொதிசுமக்கும் கழுதைகளை ஓட்ட பயன் பட்டது ) யாருக்கும் தெரியாமல் உருவிக்கொண்டு, வழியில் வரும்போது, என்னை பிடிக்க முயற்சிப்பவர்களை மிரட்டுவதற்காகவும், வழியில் மேய்ந்துக்கொண்டிருக்கும் கழுதைகளை விரட்டிக் கொண்டு ஓடியதும் தான் ஐந்து வயது வரை நினைவிலே நிற்கும் இனிமையான நிகழ்வுகளாகும். அதற்கு பின் நடந்தது காலத்தின் கோலமா?, விதியின் விளையாட்டா?......

1 comment:

c g balu said...

எல்லாம் கோலங்கள் தான். பார்ப்போம் அழகுப் பையனுக்கு கோலம் எப்படி போட்டிருக்கிறது காலம் என்று