Wednesday, July 18, 2007

ஏன் இப்படி ????

சென்ற வாரம் ஒரு செய்தியை வாசித்தேன். உடனே பதிவு செய்திட முடியவில்லை. எப்போதும் போல காரணங்கள்தான் வேண்டாமே அது. விசயத்திற்கு வருவோமா ? . செவிதிறன் குறைந்தோர் சிலர் குழுவாக, சில கோரிக்கைகளுடன், கோட்டைக்கு, நமது தமிழக முதல்வரை சந்திக்க சென்றிருக்கிறார்கள். அவர்களை அனுமதிக்க காவலர்கள் மறுத்ததுடன், கலைந்துச் செல்லவும் வற்புறுத்தியிருக்கிறார்கள். பார்த்து மனு கொடுக்காமல் அகலமாட்டோமென கூற, அதனால் கோபமடைந்த காவலர்கள் விரட்டி அடித்திருக்கிறார்கள்.

அவர்களின் கோரிக்கைகள் என்ன ?

1) ஊனமுற்றோருக்கான வேலை வாப்பிலே இட ஒதுக்கீடு.
2) அரசு அமைத்துள்ள ஊனமுற்றாருக்கான நலவாரியத்திலே, இவர்களின் கருத்தை வெளியிட சைகை மொழியாளர் நியமிக்க கோரி.
3) மோட்டார் வாகனங்களை ஓட்ட ட்ரைவிங் லைசன்ஸ் வழங்க கோரி.
இப்படி மேலும் சில கோரிக்கைகள் தான்.

காவலர்கள் என்ன செய்திருக்கலாம்

1) உடனடியாக முதலமைச்சரின் உதவியாளர்களிடம் ஆலோசனைப்பெற்று உதவி இருக்கலாம்.
2) சமுகநலத்துறை அமைச்சர் அல்லது அவரின் உதவியாளர்களிடம் தகவல் தெரிவித்து உதவியிருக்கலாம்.
3) ஊனமுற்றோர் நலவாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உதவி இருக்கலாம்.
அதைவிடுத்து வலுக்கட்டாயமாக விரட்டி அடிப்பதில் என்ன சாதித்து விடப் போகிறார்கள் ? நாம் இரானுவ ஆட்சியிலா இருந்துக் கொண்டிருக்கிறோம்.
பொறுப்பிலுள்ளவர்கள் பொறுப்பாக இருந்தால், தமிழகத்தில் பொன்னல்லவா!!
விளையும்.


இப்படி நடக்க காரணமென்ன?
1) கோரிக்கை வைப்பவர்கள் நேரடியாக முதல்வரையே பார்க்க வருவதின் காரணமென்ன ?
பதில்: கீழ்மட்டத்தில் பொருப்பிலுள்ள அதிகாரிகள் தேவையான உதவிகள் புரிவதுடன், சரியான வழிமுறைகளை காட்டி செயல் படாதது தான் மிக முக்கியமான காரணமாக கருதுகிறேன். அப்படி அவர்களால் முடிவுகாண முடியாத பட்சத்தில், தேவையில்லாமல் அலையவிடுவதை தவிர்த்து, அவர்களின் மேல் அதிகாரிகளை தங்களே தொடர்புக்கொண்டு, விபரம் அறிந்து எந்த மட்டத்தில், யாரை சந்திப்பது, முறையானது என்று சரியான வழிகாட்டுதலை செய்தால், மக்களும் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அனுகுவதுடன், தேவையின்றி போராடவுமாட்டார்கள்.
அப்படி ஒரு காலம் பிறக்குமா?

இது குறித்து கருத்துகளையும், தீர்வுகளையும் எழுதுங்களேன்.

1 comment:

c g balu said...

இந்த நடு ஆட்கள் தான் இந்தமாதிரி அட்டகாசகங்கள் பண்ணுவது. சில நல்ல அதிகாரிகளும் உள்ளார்கள்.