Thursday, June 4, 2009

வந்த கனவு -3


ஒரு இளஞி ஒரு இளஞனை அணைத்தபடி நடக்க முயல, அவனோ சுற்றும் முற்றும் பார்த்தபடியும்,அதை விரும்பாதவன் போலவும் சிறிது விலகி நடக்க முயல, அவளோ அவனை மீண்டும் மீண்டும் அணைத்தபடியே நடக்கிறாள். இது தினமும் பார்க்கில் நான் செல்லும்போதெல்லாம் கண்ணில் படுகின்ற காட்சியாகவே இருந்தது. அவள் நான் பார்ப்பதை உணர்ந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இப்படியே சில நாட்கள் கழிந்து கொண்டிருக்கும் போது, யாரையோ பார்த்து பயந்தது போல் அவன் முதுகுக்குபின் மறைந்துக் கொள்ள முற்படுகிறாள். அது யாராக இருக்குமென என் பார்வையை அங்கு செலுத்தியபோதுதான் தெரிந்தது. அவள் சகோதரி போலிருந்த ஒரு பெண்ணை பார்த்து மறைகிறாள் என்பது.

அப்பொழுதுதான் முதன் முதலாக அவளிடம் பேசுகிறேன். முறையான செயலாக இருந்தால் இப்படி பயப்பட வேண்டியது இருக்காதல்லவா!.என நான் சொல்ல, அவள் என்னை ஒரு பொருட்டாகவே கருதாமலும், அவன் என்னை பார்க்காமலும் அங்கிருந்து சென்று விடுகிறார்கள். பிறகு அவர்கள் இருவரும் என் கண்ணிலே படவில்லை. ஒரு நாள் கடற்கரையில் நான் நடந்துக் கொண்டிருந்தபோது, அவள் தனியாகவும், உடை அலங்காரங்களில் அக்கரையில்லாதவள் போலவும் முகம் வாடிய நிலையில், யாரையோ தேடுகின்ற பாவனையிலும் நின்றீருந்தாவள், என்னைப் பார்த்ததும் எதோ என்னை கேட்க நினைப்பதையும், தயக்கத்துடன் முன்னோக்கி வரமுயல்வதாக உணர்ந்து, என்னம்மா உன்னை விட்டுட்டு போயிட்டானா? என அவளிடம் நானாக சென்று பேசினேன். அவளிடம் யாராவது பகிர்ந்துக் கொள்ளமாட்டார்களா என காத்திருந்தவள் போல், கண்களில் கண்ணிர் உடைப்பெடுக்க விசும்பியபடி அவளே பேச்சை தொடங்கினாள்.

அவன் என்னை விட்டு ஓடவில்லை, நான் தான் என்னை விட்டு ஓட செய்து விட்டேன். அவன் ரொம்ப நல்லவன் சார். நான் மிகவும் அழகாய் இருப்பதாயும், எந்த ஆன்மகனும் என்னிடம் மயங்கி அடிமையாக கிடப்பார்கள் என்று என்னுடன் பேசிய அனைவரும் புகழ்ந்ததும், வசதி வாய்ப்புகளும் எங்களுக்கு சிறிது அதிகம் இருந்ததும் எனக்குள் ஒரு மதமதப்பை எற்படுத்தியது. அதிலிருந்து நல்ல உடற்கட்டுடன் அழகானவனாக்கவும், படித்தவனாக்கவும், மொத்தத்தில் ஒரு வசிகரமான ஆண்மகனை என் மனம் தேடி அலைய ஆரம்பித்தது. அப்படி ஒரு நாள் என் நினைப்புக்கு ஏற்றபடி கண்ணில் பட்டான். எல்லோரும் என்னிடம் வலிய வலிய உறவாட முயற்சிக்கையில், வலிய சென்று நானாக பேசிய போதும் விலகி செல்லும் இவனை, எப்படியும் மடக்கியே தீர்வது என முடிவு செய்து, ஒரு வழியாக என் வலையில் வீழ்த்தினேன். அதுதான் பார்க்கில் நீங்கள் பார்த்தக் காட்சிகளின் ஒரு பகுதி. என்னை விட்டு அவன் பிரிந்து சென்று விடக்கூடாது என்பதற்காக அவனுக்கு கிளர்ச்சியைய் ஊட்டி பலமுறை வீட்டிலும் வெளியிடங்களிலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருக்க அவனை பயன்படுத்திக் கொண்டேன். அதன் பயனாய் கருவும் உண்டாகிவிட்டது. அதை பற்றி அவனிடம் கூறி உடனே திருமாணம் செய்துக் கொள்ள வற்புறுத்தினேன். பெரியவர்கள் பார்த்து நம்மை இணைத்து வைத்த பிறகு நடக்க வேண்டியது இது, கருவை கலைத்து விடச்சொல்லி அவன் எவ்வளவோ முறை மன்றாடியும் கலைக்க மறுததுடன், உன்னை எப்படியும் திருமணம் செய்தே தீருவேனென்ற என் சபதமும், என் அதிதமான காதலுடன் காம வேகமும் அவனை என்னை விட்டு ஓட வைத்து விட்டது என நினைக்கிறேன். இப்பொழுதோ கருவை கலைக்க மடியாத நிலையை அடைந்து விட்டேன். அவனை தேடி சென்ற இடங்களில் பல அனுபவங்கள்( வேண்டாம் இந்த செய்திகள் ) கிடைத்தது, ஆனால் அவன் கிடைக்கவில்லை. நீங்கள் எங்கேயாவது அவனை பார்த்தீர்களா என்று உருகுலைந்த அந்த இளஞியின் உடைந்து போன குரலைக் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் உறக்கமும் கலைந்து. இப்பொழுது சொல்லுங்களேன் உங்கள் கருத்துக்களை....

No comments: