Monday, September 17, 2007

எனக்கும் !!!!!!!!!!-14

நான் ஆரம்பக்கல்வி தொடங்கியதே வீட்டில் தான். எங்கள் ஊருக்கு ஒட்டி இருக்கும் சிறு குன்றில் முருகன் சிலையை, நிறுவி வணங்க ஆரம்பித்ததால் முருகன் சாமியார் என அழைக்கப்பட்ட திரு.மாணிக்கம் என்பவர் தான் எனக்கு, மருத்துவத்தின் காரணத்தினால், வயது கூடிவிட்டதாலும், ஒரு வருடத்திலே ஒன்றாம் இரண்டாம் வகுப்புப் பாடங்களை, எங்கள் வீட்டிலேயே சொல்லிக் கொடுத்தார்.ஆசிரியர் திரு. மாணிக்கம் அவர்களை முருகன் வாத்தியார், முருகன் சாமியார் என்றே அழைப்போம். ஏனென்றால் எங்கள் அப்பா பெயரும் அதுவாகவே இருப்பதால்.

திரு.பங்காரு ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி மூன்றாம் வகுப்பை ஆரம்ப பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினேன். முன்றாம் வகுப்பை வீட்டில் படித்து விட்டு நான்காம் வகுப்பில், சட்ட விதிகளின்படி சேரமுடியாது என்பதால். இடப்பற்றாகுறையினால், எங்கள் கிராம பள்ளி இரண்டு இடங்களில் நடந்தது. எங்கள் வீட்டின் அருகிலேயே கிராமச்சாவடியில் முன்றாம் வகுப்பு நடந்தது. வகுப்பாசிரியராக திரு.பங்காரு அவர்கள் தான் இருந்தார். முதன்முதலாக் காளிப்பர் ()என்று அழைக்கப் படும் பூட்ஸூகளை இரண்டு கால்களுக்கு முழுமையாகவும்.உடல் முழுமைக்கும் இரும்புப் பட்டைகள் கொடுத்து தோலால் செய்யப்பட்ட கவசத்தை அணிந்துக் கொண்டு,
காந்தி தாத்தா கையில் உள்ள ஊன்றுக்கோளைப் போல, இரண்டு ஊன்றுக் கோள்களை,இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு, இயந்திர மனிதனைப்போல நடந்து பள்ளிக்குச் சென்றேன். சுயமாக உட்காரவோ, எழுந்து நிற்கவோ முடியாது. அதே போல நடக்கும் போது தவறி விழுந்து விட்டால், குறைந்தது மூன்று பேர் உதவியில்லாமல் எழுந்து நிற்க முடியாது. அடுத்ததாக நான்காம் வகுப்பு படிக்க மெயின் ஆரம்ப பள்ளிக்கு செல்ல நேர்ந்தது. பள்ளி சிறிது தூரமாக இருந்ததால், பூட்ஸ் போடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அப்பொழுது என்னை பள்ளிக்கு, என் பள்ளித் தோழர்களே, நான்கைந்து பேர், சிறிது தூரத்திற்கு ஒருவரென மாற்றிமாற்றி ,மூட்டைத் தூக்குவது போல தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். பள்ளிக்கு செல்லும் வழியில் எங்கள் கடையிருந்தத்தால், அவர்கள் அனைவருக்கும் பொட்டுக்கடலை @ வருகடலை, வெல்லம், வேர்கடலை, மிட்டாய்கள் ,பிஸ்கட்டுகள் என இலவசமாக வழங்கப்படும். தவிர காலையிலோ அல்லது மாலையிலோ உணவோ, சிற்றுண்டியோ கொடுப்பதும் உண்டு. அதனால் எப்பொழுதும் எனக்கு உதவ சிறு நன்பர் கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். என் புத்தகங்களை ஒருவர் உடனெடுத்து வர கிராம பள்ளி வாழ்க்கை நான்காம் வகுப்புடன் முடிந்தது. பிறகு சென்னை அடையாறில் ஆந்திர மகிள சபாவில் உள்ள ஈஸவர பிரசாத் தத்தாத்ரேயா மருத்துவமனையில் சிகிச்சையுடன் பள்ளி வாழ்க்கையும் தொடர்ந்தது. அது மேலே தொடரும்...

3 comments:

c g balu said...
This comment has been removed by the author.
c g balu said...

நின்று விட்டீற்கள் த.பு.

Dhavappudhalvan said...

பாலு அவர்களே, நிற்கவில்லை, சிறிய தடை. விரைவில் தொடர்வேன். மேலும் தங்களைப் போலவே, வேறு பதிவுகளைப் பார்வையிட காலத்தை செலவிடுவதால்.