Friday, November 28, 2008

எனக்கும்!!!!!!!!!!-15

இது வரை என் வாழ்வில் சிறு வயதிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் பலர் நண்பர்களாக இருந்துள்ளனர். ஏனோ உயிர்தோழன் அல்லது தோழி என்று சொல்லக் கூடியவகையில் எனக்கு இருப்பதாக தோன்றவில்லை. ஏன் இப்படி கூறுகின்றேனென்றால் பலரிடம் நான் மனம் விட்டு பேசியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அப்படி இருந்தார்களா என்றால், தெரியவில்லை என்பது தான் என் பதிலாக இருக்கிறது . இதை படிக்கக் கூடிய வாய்ப்பு என் நண்பர்கள் யாருக்காவது ஏற்பட்டால் வருத்தப் படவேண்டாம். அவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளக் கூடிய தகுதி எனக்கு இல்லையென்று எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் மறக்காத நண்பர்கள் பலர் இருக்கின்றனர். சிறு வயதிலிருந்தே தொடரும் சில நண்பர்களின் நட்பு என கூறுவதென்றால் திரு.பங்காரு ஆசிரியர் மகன் திரு.விஸ்வநாதன் (விவசாயி ), தர்மபுரி மாவட்டத்தில் CBCID காவல் துறையில் பணியாற்றுகின்ற திரு.பாபு ( நாங்கள் செல்லமாக அழைப்பது குண்டு பாபு என்கின்ற குண்டு). இந்த இடத்தில் சிறு தயக்கம். எந்த நண்பர்களை முதலில் அறிமுகம் செய்வதென்று.சரி, சிறிய வயதிலிருந்தே ஆரம்பித்து விடுகிறேன். முதலிலேயே எழுதியிருக்கிறேனே, அந்த ஆரம்பப் பள்ளி நண்பர்களிலிருந்தே ஆரம்பித்து விடுவோமா? அடுத்த பதிவிலே தொடர்ந்து....

No comments: