Friday, May 29, 2009

வந்த கனவு -1

எல்லோருக்கும் வரும் பகல் கனவுகளை சொல்லவில்லை. இரவுகனவுகள் பலவிதமாக வரும். அப்படி எனக்கும் ஒரு இரவில் குறைந்தது இரண்டு கனவுகளாவது வந்து விடும். பல கனவுகள் நம்பமுடியாததாகவும், விச்சித்திரமாகவும் அமைந்திருக்கும். சில சமயங்களில் முழு இரவு தூக்கத்தையும் கெடுத்ததுண்டு. சிறுவயதிலிருந்தே அந்த கனவுகளை எழுதி வைக்க வேண்டும் என நினைத்ததுண்டு. எழுத வேண்டுமென்றாலே மிகவும் சோம்பல் எனக்கு. அப்படி பாதித்த கனவுகளை ஓறீரு நாட்கள் நினைவில் வைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு மறந்து விடுவேன். ஆனால் திடிரென ஒரு எண்ணம் தோன்றியது, வந்த கனவுகளை பதிவிலே பதித்தாலென்ன என. அதன் தாக்கமே இது.
பொருமையாக படித்து விட்டு திட்டுங்களேன். ஆரம்பிப்போமா அறுவையை.ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பிக்கிறது கனவுத் திரைப்படம். காணுங்களேன் நீங்களும் என்னுடன் சேர்ந்து.

ஒரு கட்டடத்தினுள்ளே மாடியிலிருந்து மூன்று இளைஞர்கள் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இருவர் வெளிநாட்டவரைப் போலவும், மற்றோருவன் இந்திய நாட்டை சேர்ந்தவன் போலவும் இருக்கிறார்கள். இறங்கி வந்த அவர்களோ, வெளி வாசலிலிருந்தோ, மாடியிலிருந்தோ, அந்த கட்டடத்தினுள் செல்ல வருபவர்களை வழிமறித்து நிற்பதைப்போல் நிற்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே, மடியிலிருந்து மூன்று மாணவிகள் இறங்கி வருகிறார்கள். இவர்கள் அந்த மாணவிகளிடம் ஏதோ கூற, மாணவிகளில் இருவர் மன்னிப்பு கேட்கும் விதமாக, அந்த வெளி நாட்டு மாணவர்களின் காலில் விழுந்து வணங்கவும், அவர்களும் மன்னித்ததின் அடையாளமாக ஒருவருக்கொருவர் ஜாடைக் காட்டி புன்முருவல் பூத்தபடி வெளிநாட்டு பாணியில் அந்த இரு மாணவியரையும் கட்டியணைத்து அவர்கள் காதில் ஏதோ முனுமுனுத்தபடி தட்டிக் கொடுத்து விடுவிக்கிறார்கள். ஆனால் மற்றோரு மாணவியோ நம் நாட்டு மாணவனின் காலில் விழாததுடன், இவள் அவனை கட்டியணைத்து புன்னகை செய்தபடி அவன் காதில் ஏதோ முனுமுனுக்கிறாள்.

அந்த மாணவிகள் உள்ளேசெல்ல, மாணவர்கள் வெளி வாசலை நோக்கி அடியெடுத்து வைக்க முற்படுகையில், இந்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் கேலி சிரிப்பு சிரிக்கிறான். அதை உணர்ந்த இந்த மாணவர்கள், அவனை முறைத்து பார்கிறார்கள். ஆனால் அவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் " சர்தான்... போங்கடா" என்கின்றான். வெளிநாட்டு மாணவர்களோ, தமிழ் தெரியாத நம் நாட்டு மாணவனிடம், உன்னைத்தான் கேலி செய்கிறான் என சீண்டிவிடுகிறார்கள்.. அவனும் இவனும் வாய் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். தமிழ் மாணவனோ, அந்த சமயத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்த என் மனைவியை காட்டி, அவர்களிடம் புகார் செய்துக் கொள் என கை காட்டி விடுகிறான். இவன் என் மனைவியிடம் சொல்ல முயற்சிக்கிறான். ஆனால் என் மனைவிக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாததாலும், கேட்கக் கூடிய பொருமையும் இல்லாததாலும், அங்கு தொங்கிக் கொண்டிருந்த போர்டை சைகையில் காட்டி விட்டு சென்று விடுகிறாள். இவ்வளவையும் பார்த்துக் கொண்டு ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த நான், அவனை அருகில் அழைத்து விவரம் கேட்க, நான் ஆந்திராவை சேர்ந்தவன். என் பெயருக்கு முன்னாள் தாத்தா, அப்பா பெயர்களின் இன்சியலை சேர்த்து வைத்துள்ளேன். அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்களைக் கிண்டல் செய்வது போல் " சர்தான், போங்கடா" என்கின்றான். நீங்கள் அவனை தண்டிக்க வேண்டும் என கேட்கிறான். அப்பொழுதுதான் அவன் ஆந்திராகாரனென எனக்கு தெரிகிறது. அதனால் அவனை சமாதானப்படுத்தும் விதத்தில் உங்கள் வீட்டு பெறியவர்களை அவன் கேவலப்படுத்தவில்லையென எனக்கு தெரிந்த
ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் சொல்லி சமாதனப்படுத்தினேன். இப்படி பேசிக்கொண்டே தலை குனிந்திருந்த நான், அந்த மாணவிகளிடம் என்ன பிரச்சனை என கேட்டவாரே தலைத் தூக்கிப் பார்த்தால், அவனும் அங்கில்லை, என் தூக்கமும் கலைந்தது.

இன்னொரு வித்தியாசமான கனவை அடுத்தில் பார்ப்போமா..

No comments: