Monday, May 4, 2009

நாட்குறிப்பு - 2009 -2

சேலம் ஆத்துரில் வசிக்கின்ற எனது நான்காவது சகோதரி ஸ்ரீமதி.பிரபாவதி, தாய் மாமா மகன் திரு.ஜெனார்தனம் அவர்களின் மகனான திருநிறைச்செல்வன்.பிரசன்னகுமார் திருமணத்திற்கு ஜனவரி 30 ந் தேதி சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை ஆத்துர் சென்றடைந்து, பிப்ரவரி 2 ஆம் தேதி வந்து சேர்ந்தோம். இந்த பயணம் வித்தியாசமான,சிரமம் நிறைந்த பயணமாக அமைந்தது. எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சிலமுறை பயணம் செய்திருக்கிறேன். ஆனால் அங்கு போனதும் காத்திருந்தது முதல் இடி, மூன்று நான்கு பிளாட்பாரங்களை தாண்டி ரயில் ஏழாவது பிளாட்பாரத்தில் நிற்பது. அடுத்ததாய் அங்கு போவதற்கு வீல்சேர் கிடைக்கவில்லை, ஒரு வழியாய் பேட்டரிகார் வந்தது, ஆஹா என மிக்க மகிழ்ச்சியுடன் ஏறி அமர்ந்து சென்றால், ரயில் இருக்குமிடத்திற்கு எதிர்திசையில், சரக்கு டிராலிகள் தண்டவாளங்களுக்கு குறுக்கே அடுத்தடுத்த பிளாட்பாரங்களுக்கு செல்லும் வழியாக நடந்து சென்று விடுங்களென பிளாட்பாரம் கடைசில் யாருமில்லா இடத்தில் இறக்கி விட்டு, தூரத்தில் ஏதோ ஒரு புள்ளியாக தெரிந்த வெளிச்சத்தை காட்டி, அதுதான் ரயிலென பேட்டரிகார் ஓட்டுனர் சொல்ல அதிர்ந்து விட்டேன். ஒரு 50 அடி, 100 அடி நடப்பதற்கு கூட சிரமமாக உள்ள நிலையில், சரக்கு ஏற்றி செல்லும் டிராலி கிடைத்தால்கூட போதும் ஏற்பாடு செய்ய கேட்டேன். இலவச பயண பேட்டரிகாருக்கு ஒரு துகையையும் பெற்று கொண்டு, பார்த்து அனுப்புகிறெனென சென்றவர்தான். நேரமோ கடந்துக் கொண்டிருக்க, டிராலியோ வீல்சேரோ வருவதற்குறிய எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.

1 comment:

c g balu said...

இப்படித் தாங்க ‌சில சமயம் வெறுப்பேத்திடுவாங்க......