Thursday, October 8, 2009

நாட்குறிப்பு 2009 - 8

அடுத்தது ஆகஸ்ட் மாதம் 19ந் தேதி ஞாயிறுகிழமை வாராந்திர இலவச விளம்பர இதழ் ஒன்றில் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பும், திரைபட சங்கமும் இணைந்து ஊனமுற்றவர்களின் திறமைகளை கண்டறியும், ஊக்குவிக்கும் விழா 18ந் தேதி சனிக்கிழமை ஆரம்பித்து ஞாயிறுகிழமை மாலை வரை தொடர்வதாக செய்தி வந்திருந்தது. அந்த இதழ் மதியம்தான் எனக்கு கிடைத்திருந்தாலும், அந்த விழா நான் இருந்தபகுதியில் நடந்துக் கொண்டிருந்ததால் கலந்துக்கொண்டேன்.

அதில் சின்னதிரை, பெரியதிரைகளை சேர்ந்த தயாரிப்பு, நடிப்பு, பாடல், கதை, இசையமைப்பு மற்றும் அந்த துறைகளை சார்ந்த பலர் கலந்துக் கொண்டார்கள். நான் என்னுடைய எண்ணங்களையும் முன்பாகவே எழுதி வைத்திருந்த கவிதைகள் சிலவற்றையும் மேடையில் ஏறி பேச வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றிருந்ததால், சினிமா கவிதை எழுதும் போட்டியில் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டேன். அதனால் விழா தொகுப்பாளர், மேடை ஏற வேண்டும் என்ற என்னை தவிர்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் நான் விடாமல்.மேடைக்கருகில் கண்ணுக்கு படும்படியாக அமர்ந்துக் கொண்டு அவரை சைகை காட்டி நச்சரித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு வழியாக விழா முடிவுறும் நேரத்தில் கடைசியாக என்னை அனுமதித்தார். இவர் போட்டியாளர் இல்லை. மேடையேறி பேசவேண்டுமென்று விடாபிடியாக இருப்பதால், இவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது என அறிவித்து விட்டே அனுமதித்தார். அதே சமயம் நான் பேச ஆரம்பிக்கும் போதே நிகழ்ச்சி முடிவுக்கென சிறப்பு அழைப்பாளர்களை மேடைக்கு அழைத்து விட்டார்.

நான் அதைப்பற்றி கவலையே கொள்ளாமல், என் கருத்தை இயம்பவும், மேடைப்பேச்சுக்கு என்னை தயார் செய்துக் கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைத்தேயென பயன்படுத்திக் கொண்டேன். அது போலவே ஓரிரு சிறிய பேச்சு தவறுகளுடன் மனதிருப்தியுடன் முடித்தேன். சிறப்பு அழைப்பாளர்களும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவிக்க மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. பரிசுகள் வழங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மழை ஆரம்பமாகி விட்டது. அதனால் அங்கிருந்த அனைவரும் விழா நடந்த பள்ளிகட்டடத்திலேயே உள்ளே ஒதுங்கினார்கள். ஆனால் உள்ளே செல்வதற்கான படி உயரமானதாக இருந்ததால், நான் மேடையிலேயே நனையாதபடி ஒதுங்கி அமர்ந்து விட்டேன். ஆதனால் சிறப்பு அழைப்பாளர்களுடன் நெருக்கமான அறிமுகம் செய்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். அதை பிறகு உணர்ந்த நான் வருத்தப்பட்டேன். இளம் கதாநாயகனாக திரையுலகில் தற்போது உள்ள ''முகில்'' என்ற நடிகர் அவராகவே முன்வந்து வாழ்த்து தெரிவித்ததும், விடைப்பெறும்போது சொல்லிச் சென்றதும் மரியாதைக்குறியதாக இருந்தது.

அடுத்ததில்.....

No comments: