Thursday, October 8, 2009

நாட்குறிப்பு 2009 - 7






அம்மாவின் நினைவுநாள் ஆங்கில நாட்காட்டிப்படி ஜூன் 30ஆம் தேதி வந்தாலும் திதி படி ஜூலைமாதம் 4ஆம் தேதிதான் எங்கள் வழக்கப்படி அனுஷ்டித்தோம். 11ந் தேதி இரவு சுமார் 11 மணி அளவில் போன் வந்தது, 12ந் தேதி ஞாயிறு கிழமை 10 மணி அளவில் ஊனமுற்றோருக்கான ஒரு சங்கம் சென்னை கிண்டியில் துவக்கப்பட உள்ளது. அவசியம் கலந்துக் கொண்டு கருத்துக்களைக் கூற கேட்டுக் கொண்டார். அதன்படி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு 15 நிமிடத்தில் சென்று சேரவேண்டியவன். இடம் கண்டு பிடிக்கமுடியாமல் 2 மணிநேர தாமதமாக 11.30 மணிக்கு சென்றடைந்தேன்.

ஓ.. அழைத்ததற்கு மரியாதையில்லாதது போல் இவ்வளவு தாமதமாகி விட்டதே என சஞ்சலத்துடன் அங்கே சென்றால்!, கூட்டம் நடைப்பெறுவதற்குறிய எந்த அறிகுறியுமில்லாமல் இருந்ததைக் கண்டு, நிகழ்ச்சி முடிந்து விட்டது போல் உள்ளது. அதனால் தான் இங்கு யாரும் இல்லை போலிருக்கிறது, அல்லது இடம் மாறி வந்து விட்டோமோ என்ற சந்தேகத்துடனே, அங்குதான் கூட்டம் தாமதமாக நடைப்பெறயிருப்பதையும், பொருப்பாளர்களே இன்னும் வராத்தைப் பற்றியும், அங்கிருந்த ஓரிருவரிடம் கேட்டு அறிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் கூட்டமும் ஆரம்பமானது. ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துக் கொண்டோம். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஓரிரு கவிதைகளை கூறி என் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டேன். அங்கு சமபந்தி போஜனம் முடித்துக் கொண்டு கிளம்பினேன்.

No comments: