Friday, October 9, 2009

நாட்குறிப்பு- 2009 - 9

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநில அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலையில் ஊனமுற்றோருக்கான சந்திப்புக் கூட்டம் நடைப்பெறும். மாதத்தின் முதல் சனிக்கிழமை கூட்டத்தில் சமிப காலமாக கலந்துகொள்கிறேன். இம்முறை ஆகஸ்ட் முதல் வாரம் கலந்துக் கொள்ளமுடியாத நிலையேற்பட்டது. அதனால் ஜுலை மாதம் 25ந் தேதி மீண்டும் கூட்டத்தில் கலந்துக் கொள்ள சென்றேன். தலைவரின் அலுவலின் காரணமாக விரைவிலே சந்திப்புக் கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்படவும், நான் அங்கு செல்லவும் சரியாக இருந்தது. ஆனால் மாநில சங்க பொறுப்பில் இருக்கும் திரு. நந்தகுமார் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவரும் 30/08/2009 அன்று நடைப்பெற உள்ள தனது மூத்தமகள் திருமண அழைப்பிதழை கொடுத்தார். திருமண நாள் ஒரு மாதத்திற்கு மேலாக இருந்ததால், அந்த நிகழ்ச்சிப் பற்றியே மறந்துவிட்டேன். மாநில சங்கத்தால் வெளியிடப்படுகின்ற "உதவிகரம்" ஆகஸ்ட் மாதத்துக்கு உரிய இதழ் ஆகஸ்ட் 29 ம் தேதி எனக்கு கிடைத்து. அதிலிருந்த திருமணத் தகவலைக் கண்டு ஒரு நிமிடம் தவறவிட்டு விட்டேனோ என அதிர்ந்து விட்டேன். அவசர அவசரமாக அன்று மாலை நடைப்பெற்ற திருமண வரவேற்பில் கலந்துக் கொண்டேன்.

செப்டம்பர் மாதத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியாக நான்கு விழாக்களுக்கு சென்று வந்தேன். முதலில் எனது மனைவியின் சகோதரி முறையாகின்ற உறவினர் திருமதி.லக்ஷ்மி ரங்கநாதன் W/O. Y.K. ரங்கநாதன் செட்டியார் அவர்களின் மூத்தமகன் முரளி (எ) செந்தில்குமாரின் 02/09/2009 ந் தேதி திருச்சியில் நடைப்பெற்ற திருமணத்திற்கு எம் குடும்பத்தின் சார்பாக எனது மனைவி சென்றுவர, 06/09/2009 அன்று மாலை சென்னையில் நடைப்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் குடும்பத்தில் அனைவரும் கலந்துக் கொண்டோம்.

இங்கு 02/09/2009 ந் தேதி சென்னையில் திருவாண்மியூரில் நடந்த வீட்டு உரிமையாளரின் சிறிய மகளின் திருமண வரவேற்புக்கு ( ரிசப்சனுக்கு) நான் சென்று வந்தேன். என்னால் மேடை ஏறமுடியாததால், வீட்டு ஒனரிடமே அன்பளிப்பை அளித்துவிட்டு வந்துவிட்டேன். விழாவில் என் அருகில் அமர்ந்த வீட்டு ஒனரின் 85 வயதான அப்பாவிடம் சில வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்தது.

அடுத்ததாய் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநிலத் தலைவர். திரு.T.A.P.வரதகுட்டி அவர்களின் சஷ்டியப்தபூர்த்தி (60 வது பிறந்தநாள்) விழா 20/09/2009 அன்று நடைப்பெற உள்ளதாகவும், அழைப்பிதழ் இ-மெயிலில் அனுப்பியிருப்பதாகவும், கலந்துக் கொள்ளச்சொல்லி தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தபடி கலந்துக் கொண்டதுடன் , விழா தம்பதிகளுக்கு பொன்னாடை அணிவித்து எனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டேன்.

அதுசமயம் நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் சிலரையும் சந்திக்கும் வாய்ப்பும் புதியவர்கள் சிலரின் அறிமுகமும் கிடைத்தது. நண்பர் சாமுவேல் ஜெயசிங், டாக்டர்.திருமதி.சந்திரா சாய்நாத் அவர்களிடமும் பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டது மகிழ்வான தருணமாகும். செப்டம்பர் மாத நிகழ்ச்சிகள் அடுத்ததிலும் தொடருகிறது......

1 comment:

Anonymous said...

http://hghvltge.blogspot.com/2009/08/coupes-moto-legende-2009-9.html?showComment=1270778360372_AIe9_BH3w1KrVUNU6P1Q2rZ9ViUTWc0STEG26rcEJH81etdr5hY0X65PKAdAtLRETbPzuvyFgJaZHIA1nk8owcMxrr4gzakWFZiF1UiiXK3k95nkFYnY6hZtT21Jv3mVPtkaHPSB0IjUZbASL5mNCAPJ-V0Tf1jfyWEUjujZBrV03mhX3EVB9Ho1dHBlLsfPAFk_kSm1XrjKB1GHg91aVtciOD-NXpdBr40bNEk7uj1fvPm0mL7gDVs#c4839916902455793147