Tuesday, August 13, 2013

மகிழ்ச்சியாய் முடிந்த அதிர்ச்சி !



சென்னையிலிருந்து இன்று காலை (11/8/2013 ) சேலம் வந்து, புகைவண்டி நிலையத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஓரிடத்தில் பின்னால் வந்த லாரிக்கு வழி விடுவதற்காக சாலை ஓரம் ஒதுக்கியபோது, வண்டி நிலைத்தடுமாற, அச்சமயம் வண்டியை நிலை நிறுத்தி, யூடர்ன் அடித்து பாலத்தில் ஏற்றி ஓட்டுவதில் கவனமிருக்க, முன்பக்கம் மாட்டியிருந்த கைப்பை கிழே விழுந்து விட்டதை கவனிக்கவில்லை. சுமார் 15, 20 நிமிடங்களுக்கு பிறகுதான் பை தவறி போனதை அறிந்து, நினைவுகளை பின்னோக்கி ஓட்டியப்போது தான் அந்த இடத்தில் பின் வந்த லாரி நின்றதும், டிரைவர் இறங்கியதும், அதைப்பற்றி கவனத்தில் கொள்ளாமல் யான் விரைந்து வந்து விட்டதையும் உணர்ந்து, அங்கு சென்றபோது ஒரு பெண்மணியிடம் விசாரித்தபோதுதான் லாரி டிரைவர் எடுத்து போனதை உறுதிப்படுத்திக் கொண்டு, அவர் கூறிய அடையாளங்களை வைத்துக் கொண்டு அலைந்தும் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். அந்த பையில் பெருவாரியான மாற்றுத்திறனாளிகள் மற்றும் நண்பர்களின் தொடர்பு எண்கள் அடைங்கிய குறிப்பேடும், புகைப்படக்கருவியும், சிறிது பணமும் இருந்தது.

தவறவிட்டதில் மிக வருத்தத்துடன் இருந்த மதியபோழுதில் , ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு, புகைப்படக்கருவியுடன் பை எங்கள் வசம் உள்ளது பெற்று செல்லுங்கள் என்று சொல்ல. கேட்க வேண்டுமா மகிழ்ச்சிக்கு, விரைந்தோம், நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். அந்த லாரி டிரைவர் அலெக்சாண்டர் கூறினார். அந்த பை தங்களுடையது என அறிந்தும், சரக்கு இறக்க வேண்டிய நிலையிலிருந்ததால், உடனே தொடர்புக் கொள்ள இயலவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

எமது மகிழ்வை இனிப்பு கொடுத்து, நன்றியைத் தெரிவித்து விடைப்பெற்றோம். 










நண்பர்களே 
உங்கள் வாழ்த்துகளுக்காக அவருடன் ( லாரி டிரைவர் அலெக்சாண்டர் ) யான்.



https://www.facebook.com/photo.php?fbid=626732797366366&set=a.572001146172865.1073741825.100000889537867&type=1&theater

No comments: