Tuesday, August 14, 2007

இந்திய சுதந்திர தின வைரவிழா வாழ்த்து.

சுதந்திரம் என்பது நமக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய புதையல் ஆகும். அது சாதாரனமாக நமக்கு கிடைத்து விடவில்லை. அன்னியரிடம் அடிமைப் பட்டிருந்த நம் முன்னோர்கள், உடல், பொருள், ஆவியென மிகப் பெரியத் தியாகங்களைச் செய்து பெற்றதாகும்.அதை பெருமைப் படுத்தும் விதத்தில் பொருப்பாக காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா. நான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பதைத் தான் காப்பாற்றுவேன் என்றும், நம் முன்னோர்கள் தியாகங்கள் பல செய்து பெற்றுத்தந்ததை, காப்பாற்றுவதில் பொருப்பில்லாமல் நடந்துக்கொள்வது வெட்கப்பட வேண்டியதும், கேவலப்பட வேண்டியதும் அல்லவா. தய்யை செய்து சிறிது சிந்தியுங்கள். இந்த சமயத்தில் ஒரு சிறு கதையைக் கூற விரும்புகிறேன். ஒரு குரு இருந்தார். அவருக்கு இரண்டு சீடர்கள். குருவிடம் மரியாதை இருந்தாலும், குருவுக்கு பணிவிடை செய்வதில், அவர்களுக்கிடையே அடிக்கடி பிணக்கு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்த குரு, அவர்களுக்குள் ஒழுக்கமும், கட்டுப்பாடும் ஏற்படவேண்டும் என நினைத்து, அனைத்து பணிகளையும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தார். அதே போல குரு ஓய்வெடுக்கும்பொது இதமாக கைகால்களை அழுத்தி விடுதலிலும் பங்கு கொடுத்தார்.அதிலும் யார் எந்த பக்கம் என்பது பிரச்சனை. அதனால் வலப்பக்கம் ஒரு சீடனுக்கும், இடப்பக்கம் ஒரு சீடனுக்குமென பிரித்துக் கொடுத்தார். சிறிது நாட்கள் சீராக நடந்தாலும், ஒரு நாள் ஒரு சீடனை, வேறு வேலையாய் குரு வெளியே அனுப்பி விட்டார். குரு ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கியபோது, அங்கிருந்த சீடனிடம் கால்களை அழுத்தி விடச் சொன்னார். அவனோ ஒரு காலை மட்டும் அழுத்தி விட்டுக் கொண்டிருந்தான். அதை கவணித்த குரு, மற்றொரு காலையும் அழுத்தி விடச் சொன்னார். அந்த சீடனுக்கு ஒதிக்கிய காலை, நான் அழுத்தி விட மாட்டேனென மறுத்ததுடன், அந்த சீடனின் மேலுள்ள கோபத்தினால், குருவின் மற்றொரு காலை ஓங்கி அடித்தான். குருவோ வலியால் அலறித்துடித்தார். அந்த சமயத்தில் வெளியே சென்றிருந்த சீடன் அங்கு வர, விபரம் அறிந்து, கோபமேலிட்டு, எனக்கு ஒதிக்கிய குருவின் காலை எப்படி அடிக்கலாம் என்று கூறிக்கொண்டே, மற்றொரு சீடன் அழுத்தி விட்ட குருவின் காலை, ஓங்கி மிதித்தான். குருவோ இரண்டு கால்களிலும் வலி ஏற்பட்டு அலறித்துடித்தார்.அது போல நம் நாடு ஒன்றாக இருந்தாலும், இந்த பகுதி, அதிலுள்ள வளங்கள் எமக்கு( எங்களுக்கு) மட்டுமே உரிமையென, நமது பாரத அன்னையை ஆளுக்கு ஒரு பகுதியாக கூறுப்போட்டு சிதைக்கப் பார்கிறார்கள்.அந்த முட்டாள் சீடர்களிடம் மாட்டிக்கொண்டு தவித்த குரு போல நாமும் மீண்டும் அடிமைப்பட்டு விடாமல், நமது பாரத அன்னையை சிறப்பாக வலுவடைய செய்வோமென இந்த 60 ஆம் ஆண்டு, வைரவிழா சுதந்திரதின நாளில் ஒருவருடன் ஒருவரென அனைவரும் கைகோர்த்து உறுதி எடுத்துக் கொள்வோம்.
வாழ்க பாரத தேசம்!
வளர்க பாரத்தின் புகழ் !!

No comments: