Tuesday, August 7, 2007

எனக்கும் !!!!!!!!!!-11

தொடர்ந்தது மருத்துவம் யார்யார் சொன்னாலும் அதன்படியெல்லாம். நாங்கள் சைவ உணவு உண்பவர்களாய் இருப்பினும், மருத்துவம் என்பதற்காக,பச்சைக்கிளிகள் இரத்தம் என் உடலில் பூசப்பட்டது. பச்சையாக கோழிமுட்டைகளையும்,புறாக்கள் கறியும் வீட்டுவேலையாட்கள் மூலமாக வலுக்கட்டாயமாக எனக்கு ஊட்டப்பட்டது. அதற்காக நான் செய்த ஆர்பாட்டங்களும், எடுத்த வாந்திகளும், அழுத அழுகைகளும் மறக்க முடியாதவை.பாண்டி @ பாண்டிச்சேரி @ புதுவை @ புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் ஆறு மாதங்களும்,கோவை என அழைக்கப்படும் கோயமுத்தூர் தெலுங்கு பாளையத்தில் தற்போதும் இயங்கி வருகின்ற இயற்க்கை மருத்துவமனையில் ஒன்னரை வருடங்களும் தொடர்ந்தது. அங்கு மருத்துவமனையில் என் அம்மா மூன்று மாதங்களும், எம் பாட்டி.Late.செங்கவள்ளி அவர்களுடன்
எம் இரண்டாவது சகோதரி.Late.திருமதி.வசந்த குமாரி @ வசந்தா ஹரிகிருஷ்ணன் & அவர்களும் மூன்று மாதங்களும் மாறிமாறி என்னுடனிருந்து வைத்தியர் சொல்லிக் கொடுத்தப்படி எனக்குறிய மருத்துவங்களை நேரங்காலம் தவறாமல் எனக்கு செய்ததும், அதே சமயத்தில் என்னுடனிருந்த மற்ற நோயளிகள் அவர்களுடன் உதவியாக இருந்தவர்களுகும் பொழுது போவதற்காகவும் உற்சாகமாக இருப்பதற்காகவும் எம் பாட்டியார் அவ்வப்போது கூறிய நீதிக்கதைகள் நோயை மறக்கவும்,அனைவரையும் ஊக்கப்படுத்துபடியாகவும் இருந்ததை மறக்கவோ, மறுக்கவோ முடியாததாகும்.கோவை மருத்துவமனையில் எனக்கு அளிக்கப்பட்ட மருத்துவமுறைகள் அடுத்ததில்......

2 comments:

vetha (kovaikkavi) said...

ungal...மனதுக்கு இதமாக இருக்கும். பல உள்ளங்களுக்கு உரமாக இருக்கும். anupavangal...

Dhavappudhalvan said...

வலிகள், வழிகள் நிறைந்த நினைவுகள். மகிழ்ச்சி சகோதரி.