Friday, July 5, 2013

இன்றொரு தகவல்

இளவரசன் (திவ்யா) ரயில் முன் விழுந்து தற்கொலை. - இன்றொரு தகவல்









விபரம் தெரியாமல் விவரிக்க இயலாது இதை. ஆனால் மற்றொரு தகவல் உங்களுக்கு.

காதலித்த பையனும், பெண்ணும்  ஒரு சாதி மக்களே, பையன் அரசு வேளையில்  இருப்பினும் பெண்ணின் பெற்றோர் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, பஸ்ஸில் ஏற, அவளுக்காக காத்திருந்த பையனும் மற்றவர்கள் உணராத வகையில்
வேகமெடுத்த பஸ்ஸில்
ஓடி வந்து ஏற,
கை பிடியோ நழுவ,
கீழே விழுந்தான்.
பஸ்சின் பின் சக்கரங்கள்
கை மேல் ஏற,
துண்டானது கை.

பஸ்ஸில் இருந்த பெண்ணை, பெற்றோர் அழைத்து சென்று விட்டனர். புது காரணமும் ஒன்று கிடைத்தது. அரசு வேலையும் கையிழந்ததால் போய் விட்டது. கையும் வேலையும் இல்லாத  முடவனுக்கு பெண் தரமாட்டோம். பஞ்சாயத்தார் திரும்பினர் வெறும் கையுடன்.


பெண்ணோ!
காதல் தோல்வியால் கதவை தாளிட்டாள்.
கையிற்றை மாட்டினாள் கழுத்துக்கு,
பறந்தது உயிர் விண்ணுக்கு.

இன்று கதறுகின்றனர் ஒரே ஒரு வாரிசைப் பெற்ற அப்பெற்றோர்.
"அந்த பையனுக்ககே  மனம் முடித்திருந்தால்,

பேசா விட்டால் கூட,
கண்களிலாவது பார்த்துக் கொண்டிருப்போமே,
இத்தனை நாள் கஷ்டப்பட்டு வளர்த்த பாசமகளை. "

*யான் என்ன சொல்ல அவர்களுக்கு ஆறுதலாய்?


# கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இது தானோ?

No comments: