Monday, July 1, 2013

மருத்துவர்கள் (டாக்டர்கள் ) தின வாழ்த்துக்கள்....



எங்கள் ஊரிலிருந்து நகரத்திற்கு குடி பெயரும் வரை, எங்கள் குடும்ப மருத்துவராக இருந்த
தருமபுரி மாவட்டம்  பொம்மிடியில்  Dr. முனிரத்தினம் M.B.B.S. அவர்களுக்கும்,

அதே ஊரில்  Dr.ரங்கநாதன்  M.B.B.S. அவர்களுக்கும்,

சிறுவயதில் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு மருத்துவ சிகிச்சை அளித்த கோயமுத்தூர் தெலுங்கு பாளையத்தில் இயற்கை மருத்துவம் மேற்கொண்ட மருத்துவருக்கும், சென்னையில் அடையார் ஆந்திர மகிள சபா ஈஸ்வர் பிரசாத் தத்தாத்ரேயா மருத்துவமனை Dr.நடராஜன் அவர்களுக்கும்,

எமக்கு வாலிப வயதில் ஏற்பட்ட பெரும்  சளி தொல்லையிலிருந்து முதல் முறையாக முழுமையாக எம்மை விடுவித்த ஹோமியோபதி மருத்துவர் ( பெருத்த அனுபவமும் வயதும் முதிர்ந்தவர். பெயர் தெரியாது.  இயற்கை அடைந்து விட்டார், சேலம் டவுன் மணிகூண்டு கட்டிடத்தில் மருத்துவமனை வைத்திருந்தார். அந்த பழமையான வரலாறு சிறப்புமிக்க கட்டிடம், தற்போது இடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது- கொசுறு செய்தி.)

சென்னையில் அமைந்தகரை மேத்தா நகரில் எங்கள் குடும்ப மருத்துவராக இருந்த Dr. சுந்தரேசன் M.B.B.S. அவர்களுக்கும்,

 சென்னையில் எமக்கு முதுகு தண்டுவட எழும்பு சிகிச்சை அளித்த Dr.A.B.கோவிந்தராஜ் FRCS., Senior Consultant - Orthopaedics - Traumatology (Orthopetic
Surgeon ) அவர்களுக்கும்,

சென்னையில் நரம்பு தளர்ச்சி நோயிக்காக சிகிச்சை அளித்த Dr.R.பழனி M.D (Gen.Med), DM (Neuro), MRCP (UK)., Consultant neurologist, Neurointensivist & Neurophysiologist அவர்களுக்கும்,

 எம் வாழ்வு புவியில் தொடர, எமக்கு ஏற்பட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும் இன்றைய "மருத்துவர்கள் தினத்தில்" எமது இதயங்கனிந்த வாழ்த்துகளையும், வணக்கங்களையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.

No comments: