Monday, July 13, 2009

நாட்குறிப்பு - 2009 - 5

சுமார் 3 மாத காலமாக பார்லிமெண்ட் ( பாராளுமன்றம்) தேர்தலை ஒட்டி ஓயாமல் ஒலித்த அரசியல் வசவுகள் முடிவடைந்தது. ஓட்டுக்காக, பணமும் மதுவும் ஆற்று வெள்ளமாய் பல இடங்களில் பெருக்கெடுத்தோட, இன்று ( \04\2009 ) ஓட்டு பதிவு நடந்தது. அட நானும் இந்த நாட்டின் குடிமகன் அல்லவா!!!!!!!!!!, கண்டுக்கொள்ள ஆட்களின்றி (பணம் கொடுக்கத்தாங்க!, சீரியஸா எடுத்துக்காதிங்க) ஓட்டுப் போட என் மயில் வாகனத்தில் பறந்துச் (விரைந்து) சென்றேன். இதுக்கு மேல நாடந்த கூத்துக்களை கேளுங்களேன். பூத்துக்கு அருகில் வண்டியுடன் போக வாக்குசாவடிக்கு உள்ளே நுழையப்போனேன். அந்த நேரம் சடாருனு ஒரு போலீஸ்காரர் வழிமறிச்சு எங்கே போறிங்கன்னு கேட்டாரு!. அட! என்னடாயிது ஓட்டுச்சாவடிக்கு இந்த நேரத்திலே எதுக்கு வருவாங்க? இருந்தாலும் பதில் சொன்னேங்க, ஓட்டு போடன்னு. அப்படினா, கேட்டுக்கு வெளியிலே வண்டிய நிறுத்திட்டு நடந்து போனாரு. ஐயா, என்னால நடக்கமுடியாததாலே எப்பவுமே பூத்து வரைக்கும் வண்டியில போய்தான் ஓட்டு போடுவேன். வழிவுடுங்கனு சொன்னத்துக்கு, இப்படியே நில்லுங்க, கேட்டுட்டு வரேனு திரும்ப, வெயிலா இருக்குதேனு வண்டிய நிழலில நிறுத்தக் கூட அனுமதிக்க மறுத்தாருங்க. என்னடா குத்தம் செஞ்சவங்கள நடத்தரமாதிரி நடத்தராரேனு, ஐயா உங்க வேலைக்காக நீங்க வெயிலிலே நிக்கிறிங்க, நான எதுக்கு இப்ப நிக்கனுமுனு கோபம் வந்து கேட்டுபுட்டேன். இன்னொரு போலீஸ்காரரு என்னோட ஓட்டர் சிலிப்பை பார்த்துட்டு, வேற வாக்குசாவடிக்கு நானு போகனுமுனு சொல்லி வழிச்சொன்னாரு. அப்போழுதான் போக வேண்டிய வாக்குசாவடியை தவறவிட்டு வேறு வாக்குசாவடிக்கு மோப்பம் புடிச்சு போய்ட்டேனு தெரிஞ்சது. திருப்பு அந்தபக்கமுனு, அங்கபோனா வண்டிய உள்ள உடமுடியாதுனு அதே கதை கதைங்க. நானா உடுவேன். ஐயா, ஓட்டு போடறது என் உரிமை, அதுக்கு உதவறது உங்க கடமையினு, அடுக்குமொழியிலே சொல்லி, யார் உங்க மேலதிகாரியோ, அவர கூப்பிடுங்க, கேட்டுட்டு போறேனு விடாம சொன்ன நேரத்திலே, கேட்டுக்கு உள்ளயிருந்து வந்த ஒரு போலீஸ்காரரு, கேட்டுலே போலீஸை சமாதானப்படுத்தி, என்ன உள்ள விட்டாரு. ஒரு வழியா ஓட்டு குத்தி என் கடமைய முடிச்சிடு, ஜெயிச்சு வரவங்க நமக்கு செய்யவேண்டிய கடமைய சரியா செய்வாங்களானு ஏக்கத்தோடு வீட்டுக்கு வந்துட்டனேங்க.

No comments: