Thursday, July 9, 2009

வந்த கனவு - 5

சமிபத்தில் சில கனவுகள் வித்தியாசமாகவும் கோர்வையாகவும் அமைதியான நீரோட்டம் போலவும் அமைந்திருந்தது. ஆனால் விழிப்பு வந்ததும், அந்த கனவுகளை ஒரு முறைக்கு இரு முறையாக கனவுகளை நினைவு படுத்தி மனத்தில் பதித்துக் கொள்ளாத்துடன் நடைமுறை நிகழ்வுகளில் மனம் இலயத்து விட்டதாலும் சிறிது நேரத்தில் கனவுகள் நினைவிலிருந்து அகன்று விட்டது. பிறகு ஞாபகத்திற்கு கொண்டு வர முயன்றும், ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் அதே சமயத்தில் ஒரு நிகழ்வு மட்டும் நினைவில் ஆழப் பதிந்து விட்டது. ஆதாவது ஒரு கனவு மனத்தை மிகவும் சலனப்படுத்தியது. அதனால் விழிப்பு வந்தது, ஆனாலும் உடல் மிக்க சோர்வடைந்திருந்ததால், உடனே மீண்டும் உறக்கத்தில் கண் அயர்ந்தது. ஆனால் ஒரிரு நிமிடங்களில் வந்த கனவின் ஆரம்பமே நடக்க ஆரம்பித்த நான் தரையில் வழுக்கி விழுவதைப்போல் கனவு வர, என் உடல் தூக்கிப் போட துடித்தெழுந்தேன். பிறகென்ன தூக்கமும் கலைந்தது. இது எதனால் ஏற்பட்டது என சிந்தனையில் ஆழ்ந்தேன். விடையோ இல்லை. அடுத்ததைப் பார்ப்போமா வித்தியாசமாய்.....

No comments: