Monday, July 13, 2009

நாட்குறிப்பு 2009 - 4

பிப்ரவரி, மார்ச் மாதங்கள் குறிப்பிட்டு சொல்லும்படியான செய்திகளின்றி கழிந்தது. இந்த ஏப்ரல் மாதம் நினைவில் நிற்கக் கூடியதாய் அமைந்தது. 13ந் தேதி எங்கள் அப்பாவிற்கு பிறந்தநாள். 88 வருடங்கள் கழித்து, 89வது வயதிற்குள் நுழைந்திருக்கிறார். அவர் விருப்பப்படி அவர் உடற்பயிற்சி செய்து வரும் ஜெராசிம் சென்டரில் கேக் வெட்டியும், அங்கு பணியாற்றுகின்ற உதவியாளர்களுக்கு பரிசுப்பொருள் அளித்தும் பிறந்தநாள் கொண்டாடினார். பரிசுப்பொருட்களை நான் எடுத்து சென்றுக்கொண்டிருந்த போது, மாற்றுதிறனுடைய ஒரு இளஞி தன் தாயாரை வண்டியின் பின் அமர வைத்தப்படி எனக்கு முன்னாள் விரைந்துக் கொண்டிருந்தாள். அதை கண்ட நான் விரைந்து சென்று குறிக்கிட்டு நிறுத்தி ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டோம். கணனி வேலையிழந்து பணிக்காக அலைந்துக் கொண்டிருப்பதுடன், வேலை வாய்ப்பு இருப்பின் வேலைக்கிடைக்க உதவும்படியும், உறவினர் திருமணத்திற்காக மண்டபம் தேடி சென்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்க, மண்டபத்திற்கு வழி காட்டி விட்டு, வேலை கிடைக்க முடிந்த வரை உதவுவதாக கூறி விடைப்பெற்றுக் கொண்டேன். இதை தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் நான் பலரிடம் சொல்லி வேலை கிடைக்க ஏற்பாடு செய்துக் கொண்டிருக்க, அவ்வப்பொது அந்த இளஞியும் கைப்பேசியில் பேசியும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் (எஸ்.எம்.எஸ்) தேவையான தகவல்களை என்னிடம் பெற்றுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை நடைப்பெறும் எங்கள் உடல் ஊனமுற்றோர் சங்க சந்திப்புக் கூட்டத்திற்கு செல்ல அறிவுறித்திருந்தேன். அதற்கு என்னையும் துணைக்கு வரச்சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ஆனால் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த எனது பெரிய தம்பி, அன்று பயணம் மேற்கொள்ளவிருந்ததால், உதவிக்கு வரயியலாத நிலையை எடுத்து சொல்ல ஓரிரு முறை முயன்றும் தொலைப்பேசி இணைப்பு கிடைக்கவில்லை. அன்றைய சனிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் ஒரு கணனி வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பது பற்றியும், உடன் வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவிக்கவும் அந்த இளஞியின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது, அவள் இல்லை, வேலை கிடைத்து விட்டது, இனிமேல் இந்த எண்ணிற்கு தொடர்புக் கொள்ள வேண்டாம் அறிமுகமில்லாத யாரோ ஒருவர் பேசுவது போல இணைப்பை துண்டித்து விட்டார். வேலை வாங்கிதர கேட்டு இன்று காலை (18\04\09)
வரை தொடர்பு கொண்டவருக்கு, என்ன ஆனது?
உதவி செய்ய நினைத்து மூக்கு அறுப்பட்ட நிலையாக அதிர்ந்து விட்டேன். இந்த விசயத்தை ஜிரணித்துக் கொள்ள சில நாட்கள் ஆகிவிட்டது. இந்த மாதம் இவ்வளவு தான். அடுத்து என்ன?

No comments: