Tuesday, November 10, 2009

நாட்குறிப்பு 2009 -10

சென்ற வருடம் சாலை விபத்தில் முளைசாவினால் மரணமடைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள், அவனின் பெற்றோர்களான டாக்டர் தம்பதிகளால் உடலுறுப்புதானம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வு நடைப்பெற்று ஒரு வருடம் ஆவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாவட்டத் தலைவரும், திருத்துறைப்பூண்டியில் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்து சுயத்தொழில் செய்து வருகின்ற திரு. ஜெகதீசன், தன் கால் ஊனமுற்றுள்ள நிலையிலும் உடலுருப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தினால், அவரின் சங்க உறுப்பினர்கள் இருவருடன் பல மாவட்டங்களின் வழியாக, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தபடி 15 நாட்களில் சைக்களிலேயே பயணம் மேற்கொண்டு சென்னையை வந்தடைந்தனர். அவர்களை சிறப்பிக்கும் விதமாகவும், உடல் உறுப்புதான விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் பொருட்டும் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் பட்டதாரிகள் சங்கத்தின் மூலம் நடைப்பெற்ற விழாவிற்கு, இச்சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு ஊனமுற்றோர் நலவாரியத்தின் உறுப்பினருமான திரு.தங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டேன்.

இது எதற்காக நடைபெறுகின்ற விழா என அறியாமலே கலந்துக்கொண்டேன். எனென்றால் விழா நடைப்பெறுவதற்கு முதல் நாளன்று இரவு எனக்கு போன் செய்து, சென்னை தியாகராயநகர் வெங்கடநாராயணா ரோடிலுள்ள பள்ளி வளாக அரங்கத்தில் விழா நடைப்பெறுகிறது, தவறாமல் கலந்துக்கொள்ளுங்கள் என திரு. தங்கம் அவர்களின் அழைப்பையேற்று, அங்கு சென்ற பிறகுதான் விழா குறித்த விபரமே தெரிந்தது, இதை குறித்து பேசுவதற்கு ஏற்றவகையில் நானும் குறிப்புகள் எடுத்து வந்திருப்பேன் அல்லவா என நண்பர் என்ற முறையில் கேட்டேன். அதற்கு அவரோ திடிரென்று தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநில தலைவர் திரு. T.A.P. வரதகுட்டி அவர்களின் அறிவுரைப் பேரில் மூன்று நாட்களில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது என சமாதானம் கூறினார். தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநில தலைவர் திரு. T.A.P. வரதகுட்டி அவர்கள் தலைமையில் சமுக சேவையில் ஈடுபாடு உடையவரும் திரைப்பட நடிகருமான திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், எக்ஸ்னோரா இண்டேர்நேசனல் தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.நிர்மல், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலசங்க செயலாளர் திரு.சிம்மசந்திரன் மற்றும் பலர் கலந்துக்கொள்ள விழா நடைப்பெற்று முடிந்தது.

என்னுடைய கருத்துகளையும் பதிவு செய்யும் விதமாக நானே வலிய வாய்ப்பைக்கேட்டு, எனது தாய், சகோதரி ஆகிய இருவரும் கண்தானம் செய்துள்ளதையும், இரத்தம்,கண்,உடல் உறுப்பு தானம் பற்றிய அவசியத்தை ஓரிரு வரிகளில் ( பேசுவதருக்கு தயார் செய்துக்கொண்டு போகாததால்) தெரிவித்து முடித்துக்கொண்டேன். கடைசி கட்டத்தில் திரு.ஜெகதிசன் பேசுவதற்கும், அவருக்கு பொன்னாடை அணிவிக்கவும் வலியுறித்தியதாக திரு.சிம்மசந்திரன் பிரிதொரு சமயத்தில் என்னிடம் தெரிவித்தார்.

விழா முடிவடைய இரவு கூடுதலான நேரம் ஆகிவிட்டபடியாலும், அந்த சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து நின்று விட்டபடியாலும் வாகனவசதியில்லாத ஊனமுற்றவர்கள் விழாவில் கலந்துக் கொண்ட மற்றவர்களின் வாகன உதவியுடன் வெளியேறிக் கொண்டிறிப்பினும் கடைசியில் இரு ஊனமுற்ற பெண்கள் வெளியேற வழியின்றி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் மாநிலசங்கத்தை சேர்ந்த செல்வியும், மேற்கு மாம்பழத்தை சேர்ந்த மற்றொரு யுவதியுமாகும். யுவதியை தியாகராயநகர் பஸ் ஸ்டேண்டில் அழைத்து போய் விட்டு விட்டு, மீண்டும் விழா நடைப் பெற்ற இடத்திற்கு வந்து, ரோட்டில் தனியாக நின்றுக் கொண்டிருந்த செல்வியை சைதாப்பேட்டை பஸ் ஸ்டேண்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு சென்றடைய நேரமாகிவிட்டது. அடுத்தது அடுத்ததில்....

No comments: