Tuesday, November 10, 2009

நாட்குறிப்பு 2009 - 11

இந்த மாதத்தில் ஒரு வருத்தமான விசயமும் நடந்தது. வாடகையில் மற்றம் செய்யக்கூடாது என, இரண்டு வருட ஒப்பந்தம் செய்து, நான் தற்போது வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்கு வந்து ஒரு வருடம் கூட முடியவில்லை, அதற்குள் வீட்டின் ஓனராக இருக்கின்ற பெண்மணி, வாடகையை 25 சதவீதம் உயர்த்தி தரவேண்டும் அல்லது வீட்டை காலிசெய்து விடுங்களென எச்சரிக்கை விடுத்தார். நானோ ஒப்பந்தத்தை நினையூட்ட, அவரோ பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. எனவே ஒப்பந்தத்தைப் பற்றி பேசவேண்டாம், விருப்பம் இல்லையேல் காலி செய்துவிடுங்கள் என கண்டிப்பாக கூற மீண்டும் வீட்டை தேடுவது தற்போதய சுழ்நிலையில் மிகவும் கடினமாக தோன்றியதால், அவரிடம் 500 ரூபாய் உயர்த்திதருவதாக மன்றாடி, பின் ஒருவழியாக 1000 ரூபாய் உயர்த்தி பெற்றுக் கொள்ள சம்மதித்து சென்றார். இது எங்களுக்கிருந்த பொருளாதார சுழ்நிலையில் மிக்க சிரமத்தை உணர்ந்தோம். ஆனால் தற்போதைக்கு ஏற்றுக் கொண்டாலும், கூடிய விரைவில் குத்தகைக்கோ (Lease), குறைந்த வாடகைக்கோ வீடு பார்த்து சென்று விடுவதென முடிவு செய்துக் கொண்டேன். ஏனென்றால் இந்த குடியிருப்பு கட்டடித்திலேயே நன்கு வீடுகளும், வேறொரு இடத்தில் பல குடியிருப்புகள் கொண்ட முழு உரிமையுடைய கட்டடமும் ( ) , வீட்டில் இரு மகள்களும் உயர் பணிகளில் இருக்க, இத்தனை பெருத்த வருமானம் இருந்த சூழ்நிலையிலும் விலை உயர்வை காரணம் காட்டி, ஒப்பந்தத்தையும் நிராகரித்து, அவர் என்னைமரியாதை குறைவாக பேசி டார்ச்சர் செய்தது, கணவனை இழந்த பெண்மணியான, அவர் மேல் இருந்த பெரும் மதிப்பு அந்த நொடியில் பாழ்பட்டுவிட்டது.


மேற்கு மாம்பழம் அரிமா சங்கத்தை சேர்ந்த திரு. மாம்பழம் முருகன் அவர்களின் அழைப்பின் பேரில், 27/09/2009 அன்று மாலை சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை மண்டலம் எண்: 9 ன் ஊருந்து ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் ஆயுதபூசையை முன்னிட்டு நடைப்பெற்ற ஊனமுற்றோருக்கு உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டேன்.ஆனால் விழா துவங்குவதற்கு முன்பாகவே பெருங்காற்றுடன் பெரும்மழையும் துவங்கி விட்டதால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்சிகள் சீர்குலைந்தது, ஒரு வழியாக ஒரு கட்டடத்தின் போர்டிகோவில் உதவிகள் மட்டும் வழங்கப்பட்டது. சென்னை மாநகர மேயர்.திரு.சுப்பிரமணியம் அவர்களும், மாநகர கமிஷ்னர் திரு.லக்கானி அவர்களும் மற்றும் சில சிறப்பு அழைப்பாளர்களும் தனித்தனியாக வந்து உதவிகளை வழங்கி மரியாதை பெற்று சென்றார்கள். மேடைப் பேச்சுக்கான வாய்ப்பு கிடைத்தும் மழையினால் பறிபோனது. அதற்கான வாய்ப்பு விரைவிலேயே மீண்டும் கிடைத்தது. எதில்? அது மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவில்...

திரு.மாம்பழம் முருகன் அவர்கள் என்னுடைய மேடைப் பேச்சுக்கான ஏக்கத்தை புரிந்துக் கொண்டு, மேற்கு மாம்பழத்தில், மேற்கு மாம்பழம் அரிமா சங்கத்தின் சார்பில் அக்டோபர் 2 ந் தேதி மகாத்மா காந்தி அவர்களின் 141 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு உதவிகள் வழங்கும் விழாவில் பேச வாய்ப்பளித்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் ஒன்று மேடைப்பேச்சு போல் அல்லாமல், ஏதோ பாடம் பார்த்து படிப்பது போல என்னுடைய பேச்சு இருந்தது என்பதையும், மேலும் மேடைப்பேச்சுக்கு தகுந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென்பதையும் அறிந்துக் கொண்டேன். அந்த உரையை http://aambalmalar.blogspot.com/ வலைப்பதிவில் ஐந்து பகுதிகளாக பதிவு செய்துள்ளேன்.அடுத்ததில்....

No comments: