Wednesday, November 11, 2009

நாட்குறிப்பு 2009 -13

அத்துடன் இந்த தீபாவளி திருநாள் இரவும் மனவருத்தத்தை அளிக்கும் நிகழ்வு ஒன்று நடந்தது. செப்டம்பர் மாதம் திருமணமான உறவினரின் மகனும், மருமகளும் தலை திபாவளிக்கு செல்லமுடியாத சூழ்நிலை, அதனால் எங்கள் வீட்டிற்கு, அவர்கள் அனைவரையும் அழைத்து மதிய விருந்து அளித்தோம். அதனால் மாலையில் விரைவாக பட்டாசுகளை வெடிக்க செல்லமுடியவில்லை. ஆகவே 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்க மொட்டைமாடிக்கு ( மேல்தளத்துக்கு) சென்றோம். அப்போது இரண்டாம் தளத்தில் குடியிருந்து வரும் குஜராத்தி வீட்டு புதுமண தம்பதிகளும் மேல்தளத்திலிருந்து, அவர்கள் வீட்டிற்கு செல்ல படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, மேல்தளத்திற்கு சென்றோம். அங்கும் வீட்டு உரிமையாளரின் புதுமண தம்பதிகளான சிறிய மகளும் மருமகனும், பெரிய மகளும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்கள்.மாடிப்பகுதியோ விரிந்திருக்க, அவர்களை தாண்டி செல்லமுடியாததால், இடம் இருந்த முற்பகுதிலேயே, 89 வயதான எனது தந்தையை சேரில் அமர வைத்துவிட்டு நான் தரையில் அமர்ந்திருக்க,நாங்களும் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தோம். டபுள்சாட் எனப்படும் இரட்டை வெடியை, நிற்க வைத்து விடாமல் படுக்கை வசத்திலும், மற்ற சில வெடிகளை எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் எங்களுக்கு அருகிலேயே வைத்ததைக் கண்டு, சிறிது தள்ளி வெடிகளை வெடிக்க கேட்டுக் கொண்டும், அதை பொருட்படுத்தாதவர்களாய், எங்களுக்கு அருகிலேயே வெடித்தார்கள். எனது தந்தைக்கும், எனக்கும் மற்றும் வெடிக்க வைத்திருந்த பட்டாசுகளுக்கு அருகிலேயே தீப்பொறிகள் வருவதை கூறி மீண்டும் அறிவுறுத்தியும், அவர்கள் செவிமடுக்காததை கண்ட நாங்கள், விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருப்பதை உணர்ந்ததும், உடனடியாக எங்கள் வீட்டிற்கு திரும்பிவிட்டோம். இரவு பத்து மணிக்கு மேல் குஜராத்தி வீட்டுகாரர்கள் பட்டாசு வெடிக்க மாடிக்கு அழைத்தார்கள். அப்பொழுது தான் தெரிந்தது, குஜராத்தி வீட்டு புதுமண தம்பதிகளும் இடையிலேயே எங்களைப் போலவே பாதிக்கப்பட்டார்கள் என்பது. எங்களுக்கு சோர்வாக இருப்பதை கூறி, அவர்களுடன் கலந்துக் கொள்ளமுடியாமைக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொண்டோம். நம் மகிழ்வுக்காக, மற்றவர்களின் சந்தோஷத்தை பறிக்கலாமா?. விழா என்பதே அனைவரும் மகிழ்வதற்குதானே!. எப்பொழுது இதை உணர்வார்களோ. வரிசையாக இந்த நிகழ்வுகள் அனைத்தும் எனக்கு மிக்கவருத்தத்தை ஏற்படுத்தியது. அடுத்ததில் தொடரும் நவம்பர் மாத நினைவுகள்........

01/11/2009.

No comments: