Tuesday, November 10, 2009

நாட்குறிப்பு 2009 -12

மேற்கு மாம்பழம் அரிமா சங்க விழாவை முடித்துக் கொண்டு, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கத்தில் பணியாற்றுகின்ற செல்வி அவர்களின் அழைப்பின்பேரில், அவர்களையும் அழைத்துக் கொண்டு "வாய்ஸ் ஆப் நந்தினி" என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் அடையார் யூத் ஹாஸ்டல் விழா அரங்கத்தில் நடைப்பெற்ற "காந்தி ஜெயந்தி " விழாவுக்கு சென்று விட்டு, அங்கிருந்து அடையார் காது கேளாதோர் பள்ளிக்கு சென்று விட்டு, அப்படியே கோட்டூரில் இயங்கிவரும் தமிழ்நாடு ஊனமுற்றோர் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு முதல்முறையாக சென்றேன். அதன் தலைவர் திரு.சிதம்பரநாதன் அவர்கள், நான் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கத்தில் இணைந்தபோதிலிருந்தே அறிமுகமானவர். அப்பொழுது அவர் மதுரை மாவட்ட சங்க தலைவராக செயல்பட்டு வந்தார். நான் அங்கு சென்றிருந்த சமயம் அவர், மதுரையில் அன்று "கலைவிழி" அமைப்பின் சார்பில் கதை, இசை, நடிப்பு, இயக்கம் என மாற்றுதிறனாளிகளால் மட்டும் உருவாக்கப்படும் "மா" திரைப்பட துவக்க விழாவுக்கு சென்றிருந்தார். இந்த சங்கத்தின் மாநில செயலாளராக செயல் பட்டு வரும் திரு.சிம்மசந்திரன் அவர்களை சங்கத்தில் சந்தித்து சில மணித்துளிகள் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டோம். சங்கத்தின் செயல்பாடுகளை விவரித்தார். சங்கத்தால் வெளியிடப்படுகின்ற "மாற்றுத்திறன் மக்களின் குரல்'' இதழை வழங்கியதுடன், இச்சங்கத்தின் அறக்கட்டளையும், அட்வென்ட் டிசைன்ஸ் நிறுவனமும் இனைந்து 10 ந் தேதி நடத்தவிருந்த ஊனமுற்றோருக்கான சுயம்வர நிகழ்ச்சிக்கான அழைப்பிதழையும் கொடுத்ததுடன், 4.5 ந் தேதிகளில் தென்னக இரயில்வேயால் நடக்கவிருந்த '' இரயில் பயணங்களில் ஊனமுற்றவர்கான குறைகள்'' குறித்த கருத்தறியும் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் கலந்துக்கொள்ள முடியவில்லை. அதே போல் இந்த அக்டோபர் மாதம் 14,15 தேதிகளில் டெல்லியில் இந்திய இரயில்வேயால் நடைப்பெறவிருந்த அகில இந்திய ஊனமுற்றவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவிருந்த கூட்டத்திற்கும் அழைப்பு அச்சமயத்தில் விடுத்தார். ஆனால அதற்குரிய நடைமுறை தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக இல்லாததால், அவர்களுடன் இனைந்து செல்லமுடியவில்லை.கலந்துக்கொள்ள முடியாமல்போனது மனவருத்தத்தை அளித்த நிகழ்வுகள்.


அடுத்ததில்............


No comments: