Monday, October 14, 2013

இன்றொரு தகவல். - மகிழ்வான நாளிது.



இனிய மதிய வணக்கம் நண்பர்களே!

இன்றைய நாள் வாழ்விலே மகிழ்வான ஒரு நாளாகும். ஆம். காலை சிற்றுண்டிக்காக சிற்றுண்டி சாலைக்கு சென்றோம். அங்கு ஒரு பெண்மணி, எமைக் கண்டதும், எமது பெயரையும், பிறந்த ஊரையும் கூறி, சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொண்டார். எமது எண்ணங்களோ வேகம் பிடிக்க, எங்கோ பார்த்த முகமாக தெரிகிறது, ஆனால் அகப்படவில்லை நினைவு நூலிழைகள்.

உங்களை பார்த்த முகமாக தோன்றினும், நினைவுக்கு வரவில்லையே என்றோம். எமது உயர்நிலைப்பள்ளி வகுப்புத்தோழர் வள்ளி செட்டியின் தங்கை என அறிந்ததும், எமது நண்பரையே நேரில் கண்டது போல் மனம் சிலிர்த்ததை சொல்லவும் தேவையில்லை.

இளங்காலை வெயிலில் இருந்தபடியே சில நிமிடங்கள்  அளவுலாவிக் கொண்டிருந்த நேரத்திலேயே, நண்பருக்கும் அலைப்பேசியில் அழைப்பு விடுத்து எம்மிடம் கொடுக்க, மகிழ்வுகளை பரிமாறிக் கொண்டோம்.

அம்மகிழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஆவலில் இப்பதிவிது.





No comments: