Monday, October 14, 2013

மறக்க முடிய நிகழ்ச்சி அனுபவங்கள் பல



 

 

சேலம் ஆத்துரில் வசிக்கின்ற எனது நான்காவது சகோதரி ஸ்ரீமதி.பிரபாவதி, தாய் மாமா மகன் திரு.ஜெனார்தனம் அவர்களின் மகனான திருநிறைச்செல்வன்.பிரசன்னகுமார் திருமணத்திற்கு 2009 ஜனவரி 30 ந் தேதி சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை ஆத்துர் சென்றடைந்து, 2009 பிப்ரவரி 2 ஆம் தேதி வந்து சேர்ந்தோம். இந்த பயணம் வித்தியாசமான,சிரமம் நிறைந்த பயணமாக அமைந்தது.
 
எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சிலமுறை பயணம் செய்திருக்கிறேன். ஆனால் அங்கு போனதும் காத்திருந்தது முதல் இடி, மூன்று நான்கு பிளாட்பாரங்களை தாண்டி ரயில்  ஏழாவது பிளாட்பாரத்தில் நிற்பது. அடுத்ததாய் அங்கு போவதற்கு வீல்சேர் கிடைக்கவில்லை, ஒரு வழியாய் பேட்டரிகார் வந்தது, ஆஹா என மிக்க மகிழ்ச்சியுடன் ஏறி அமர்ந்து சென்றால், ரயில் இருக்குமிடத்திற்கு எதிர்திசையில், சரக்கு டிராலிகள் தண்டவாளங்களுக்கு குறுக்கே அடுத்தடுத்த பிளாட்பாரங்களுக்கு செல்லும் வழியாக நடந்து சென்று விடுங்களென பிளாட்பாரம் கடைசியில் யாருமில்லா இடத்தில் இறக்கி விட்டு, தூரத்தில் ஏதோ ஒரு புள்ளியாக தெரிந்த வெளிச்சத்தை காட்டி, அதுதான் ரயிலென  பேட்டரிகார் ஓட்டுனர் சொல்ல அதிர்ந்து விட்டேன்.
 
ஒரு 50 அடி, 100 அடி நடப்பதற்கு கூட சிரமமாக உள்ள நிலையில், சரக்கு ஏற்றி செல்லும் டிராலி கிடைத்தால்கூட போதும் ஏற்பாடு செய்ய கேட்டேன். இலவச பயண பேட்டரிகாருக்கு ஒரு துகையையும் பெற்று கொண்டு, பார்த்து அனுப்புகிறெனென சென்றவர்தான். நேரமோ கடந்துக் கொண்டிருக்க, டிராலியோ வீல்சேரோ வருவதற்குறிய எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.

 

எங்கள் மகள் விரைந்து சென்று யாரிடமோ கேட்டு, வீல்சேருடன் இரயில் நிலைய ஊழியரையும் அழைத்து வந்தார். மீண்டும் அதிர்ந்தோம் வீல்சேரைக் கண்டு. ஆம், அது குழந்தைகளை அழைத்து செல்லத்தக்க வகையில் மிக சிறியதாக இருந்த்து. கேட்ட்தற்கு வேறு கிடைக்கவில்லை. அதனால்தான் இது என அறிந்து, அப்படியிப்படியென குறுகி அமர்ந்து, ஒரு வழியாக புகை வண்டியில் ஏறியமர்ந்தோம். திரும்பி வந்த போதும் சிரமப்பட்டோம்.

அதனால் அன்றிலிருந்து குடும்பத்துடன் சேர்ந்து பயணம் மேற்கொள்ளவதை குறைத்துக் கொண்டு  விட்டோம்.

 

No comments: