Saturday, December 6, 2008

எனக்கும்....23

ஆந்திர மகிளசபா ஈஸ்வர பிரசாத் தத்தாத்ரேயா மருத்துவமனை ஆரம்பத்திற்கு ஒரு காரணம், ஆந்திராவை சேர்ந்த ஒரு பெரிய தன்வந்தர்களான தம்பதிகளின் மகன் ஈஸ்வர பிரசாத், போலியோவினால் பாதிக்கப்பட்டு, சிறு வயதிலேயே இறைவனடியை அடைந்து விட்ட சோகத்தாலும், போலியோவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிக்கும் பொருட்டும் ஆரம்பிக்கப்பட்டதுதான் இது. இதனால் ஆந்திராவை சேர்ந்தவர்கள் அதிகமிருப்பார்கள். அப்படி ஆந்திராவை சேர்ந்த இருவரைப் பற்றி இப்பொழுது. அதிலொருவன் நினைத்த நேரத்திலெல்லாம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ''விவசாயி'' படத்தில் வரும் '' விவசாயி... விவசாயி... கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி....'' என்ற இந்த வரிகளை மட்டும் திரும்ப திரும்ப இருக்கின்ற இடமே அதிரும்படியாக பாடுவான். அவனை யாராலும் கட்டுபடுத்தவே முடியாது. ஆனால் கட்டுப்படுத்த எங்களுக்கு தெரியும். அதாவது அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்தால் நிறுத்திவிடுவான். இது எங்களைத்தவிர மற்றவர்களுக்கு தெரியாது. அவன் காதுக்கு எட்டும் வகையில் மிக மெதுவாக ''விவசாயி'' என்று கூறினால் போதும் பாட ஆரம்பித்து விடுவான்.அவன் அடிபடும்பொழுது பார்க்க வருத்தமாக இருந்தாலும், வார்டன் அம்மாவை வெருப்பேற்ற நினைக்கும் போது பயன்படுத்திக் கொள்வோம். அதனால் அந்த டெக்னிக்கை யாருக்கும் தெரியபடுத்தாமல் வைத்திருந்தோம். ஆனால் அவன் மகாகஞ்சபிரபு, எங்களால் சாப்பிடமுடியாத பட்சத்தில், அவனிடம் கொடுத்து விட்டால் சாப்பிட்டு விடுவான். சாப்பிட முடியாவிட்டால், பிறகு சாப்பிடுவதற்காக, காகிதமிருந்தால் கட்டி போட்டுக் கொள்வான். காகிதமில்லாவிட்டால், அப்படியே பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வந்து பெட்டியில் வைத்துக் கொள்வான். குளிக்க பாத்ரூம் போகும்போது சோப்,பேஸ்ட், பிரஷ் அனைத்தும் எடுத்து போவான், ஆனால் பயன்படுத்தவே மாட்டான். ஆள் வாட்டசாட்டமாக இருப்பான். யாரிடமும் சேரவோ பேசவோ மாட்டான். தனிகாட்டு ராஜா. அவனை யாரும் பார்க்கவே வரமாட்டார்கள். அவனுக்கு ஒருசமயம் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அந்த சமயத்தில்அவனுக்கு துணி மாற்றுவதற்காக பெட்டியின் சாவியைக் கேட்டதற்கு தரமறுத்து விட்டான். வேறுவழியின்றி அவனையே பெட்டியை திறந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல, பெட்டியை மெதுவாக அவனே திறந்தான். அந்த சமயத்தில்......

2 comments:

vetha (kovaikkavi) said...

பெட்டியை மெதுவாக அவனே திறந்தான்.

அந்த சமயத்தில்......

vetha.Elangathilakam.
Denmark

Dhavappudhalvan said...

@ kavithai said...
///பெட்டியை மெதுவாக அவனே திறந்தான்.

அந்த சமயத்தில்......

vetha.Elangathilakam.
Denmark///

ஒரு புதையல் அவன் பெட்டியில். என்னவென்று வாசித்துப் பாருங்கள் சகோ அடுத்த பதிவை.