Thursday, December 11, 2008

எனக்கும் --24

அவனே அவன் பெட்டியைத் திறந்த சமயத்தில், அவனிடமிருந்து பிடுங்கிப் பார்த்தார்கள். அவனுடைய துணிமணிகள் இரண்டு மூன்றும், உபயோகித்த (பாத்ரூமுக்கு எடுத்து சென்றுவிட்டு வந்த) சோப்,பேஸ்ட்,பிரஷும் இருந்தது. அது தவிர அத்துடன் இருந்தவைதான் அதிர்ச்சியையும் . கேலியையும் கிண்டலையும் ஏற்படுத்தியவையாகும். எல்லோரும் கேலி, கிண்டல் செய்தாலும், எனக்கு அவன் மேல் அனுதாபத்தைத்தான் ஏற்படுத்தியது. என்னவென்று தெரிந்துக் கொள்ள உங்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்குமே!. ஆமாங்க, அவன் சாப்பிட்டது போக மீதியான இட்லி, தோசை,வடை,உப்புமா ஆகியவற்றை பொட்டலம் கட்டியும் கட்டாமலும், பெட்டியில் நிறையிருந்ததுதான். பெட்டியை பிடுங்கியதற்கும் அதிலிருந்த குப்பைகளை எடுத்து வெளியில் போட்டதற்கும் அழுது பெரிய ஆர்பாட்டமே செய்து விட்டான். சுமார் ஒரு பத்து மாதங்களே அவன் அங்கிருந்தான். அவனை அங்கு சேர்த்த பிறகு முதன்முதலாக அவனை பார்க்க வந்த அவன் பாட்டி, அங்கு சரியான கவனிப்பு இல்லையென்றும், பேரன் மிகவும் உடல் மெலிந்து விட்டதாக கூறி, டிசார்ஜ் செய்து அழைத்து சென்று விட்டார்.
இவனைப் பற்றி முடிப்பதற்கு முன், மேலும் ஒன்றையும் சொல்ல வேண்டும். மாடிக்கு சென்றுவர படிகட்டுகள், சாய்தள வழி என இரண்ட் வழிகள் உண்டு. சில நேரங்களில் நான் மற்றும் சில ஊனமுற்றுள்ளவர்களும் படிகட்டுகள் வழியாக வரும்போது கைப்பிடி சுவற்றில் சாய்ந்துக்கொண்டு கால்களைக் கீழே வைக்காமல், வழுக்கிக் கொண்டு வருவோம். ஆனால் இவனோ, இந்த பக்கம் ஒன்று அந்த பக்கம் ஒன்று கால் போட்டு அமர்ந்துக் கொண்டு, முன் பக்கமாகவோ அல்லது பின் பக்கமாகவோ பார்த்தபடி கைப்பிடிசுவற்றில் வழுக்கிக் கொண்டு வந்து, சடாரென்று சரியாக கைப்பிடி முனையில் நிற்பான். பார்ப்பவர்களுக்கு ஒரு நொடி மூச்சு நின்றுவிடும். அடுத்தவன் செகந்திராபாத்தை சேர்ந்தவன். அவனைப் பற்றி அடுத்ததில்.......

2 comments:

vetha (kovaikkavi) said...

I am reading..next..What...?

Dhavappudhalvan said...

@ kavithai said...
///I am reading..next..What...?///


Next.. next... Interesting some thing. Thanks and good night sis.