Saturday, December 20, 2008

எனக்கும் - 26

முன்பாகவே இவர்களை ஆறிமுகம் செய்திருக்கிறேன், சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன், எதிர்பாராத வகையில் சந்தித்து ஊனமுற்றவர்கள் என்ற முறையில் அறிமுகம் செய்துக் கொண்டபோது தான், இவர் ரவிசந்திரன் என்பதும், சென்னை எக்மோர் ரயில்வே அலுவலகத்தில் பணியாற்றுவதையும் அறிந்துக் கொண்டேன். அதேபோல  திண்டுக்கல்.கணகசபாபதியையும், எங்கள் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் மாநில சங்க விழாவில் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொண்டோம். இந்த இருவரின் அறிமுகம் மீண்டும் கிடைத்தும், நட்பை தொடரமுடியாமல் தவறவிட்டதற்கு வருந்துகிறேன். அடுத்தது சென்னையில் பள்ளி வகுப்புகளும் ஆசிரியர்கள் பற்றியும்  பார்போமா!!!. மூளைவளர்ச்சி இல்லாதவர்களுக்கென ஒரு வகுப்பறையும், ஆந்திர மாணவர்களுக்கு ஒரு வகுப்பறையும், தமிழ் மாணவர்களுக்கு ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை ஒரு வகுப்பறையும், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பறையும், ஆக நான்கு வகுப்பறைகள் இருந்தன. இந்த நான்கு வகுப்பறைகளுக்கும் நான்கு ஆசிரியர்கள் மட்டுமே. அந்த நான்கு ஆசிரியர்களிடமும்  எனக்கு நல்ல அறிமுகமுண்டு. அதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. அதைப்பற்றி பின்னொரு சமயத்தில் சொல்கிறேனே. ஒன்பதாம் வகுப்பிலிருந்து பக்கத்திலிருக்கும் மாநகராட்சி பள்ளிக்கு, மருத்துவமனையிலிருந்த சைக்கிள் ரிக் ஷாவில் அழைத்து சென்று வருவார்கள். முத்து என்பவர்தான் ரிக் ஷா  ஓட்டுபவராகவும், வாட்சுமேனாகவும் பணிபுரிந்தார். அவர் இறந்து விட்டதாகவும், அவர் மகன் விஜயன் தற்போது அங்கு பணியாற்றுகிறார். எனக்கு சைக்கிள் ரிக் ஷாவில் சென்று படிக்கக் கூடிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் ஏழாம் வகுப்பு முடிந்ததும் 1970 ம் வருடம் மே மாதமே டிசார்ஜ் ஆகி ஊருக்கு வந்து விட்டேன். அந்த வருடம் ஜூன் மாதம் நடக்கவிருந்த எனது இரண்டாவது சகோதரியும், இரண்டு வருடங்களுக்கு முன்பாக இறைவனடி அடைந்து விட்ட திருமதி.வசந்தா ஹரிகிருஷ்ணன் அவர்களின் திருமணத்திற்காக, விடுப்பில் அழைத்து செல்ல வந்திருந்தார்கள். அப்பொழுதெல்லாம் டாக்டரின் ஒப்புதலில்லாமல் யாரும் விடுமுறையில் செல்லமுடியாது. எனவே டாக்டரின் அனுமதிக்காக சென்றபோது,  அவர், உங்கள் மகனுக்கு ( அதாவது என்னை ) தேவையான மருத்துவ சிகிச்சை முடிந்து விட்டது. நடந்து பழகுவது ஒன்றே சிகிச்சை. ஆதலால் டிசார்ஜ் அழைத்து சென்று விடுங்கள், ஊரிலும் நடக்கவையுங்கள் என்று அறிவுறையும் கூறி அனுப்பிவிட்டார். இன்னும் சில செய்திகள் உண்டு...   

2 comments:

vetha (kovaikkavi) said...

தேவையான மருத்துவ சிகிச்சை முடிந்து விட்டது.

நடந்து பழகுவது ஒன்றே சிகிச்சை. ,,,,mmmm,,mmm,,,,,,
vetha.Elangathilakam

Dhavappudhalvan said...

ஆழ்ந்து வாசிக்கிறீர்கள் போலுள்ளது சகோதரி. மகிழ்ச்சி.