Sunday, January 11, 2009

எனக்கும் -30

இடையிலே எழுதாமல் விட்டுவிட்ட மைனர் ஆப்ரேசன் பற்றி, வலது கால் நீட்டி வைத்தால், அதில் நரம்பு சுருண்டிருப்பதால் தானாகவே மடங்கிக் கொளகிறது என்ற காரணத்தினால் ஆந்திர மகிளசபாவில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் மைனர் ஆப்ரேசன் செய்ய வேண்டுமென்று டாக்டர் முடிவு செய்தபடி, ஆந்திர மகிளசபாவிலே ஒரு பகுதியாக இருந்த மகப்பேறு மருத்துவமனையில் ஆப்ரேசன் செய்தார்கள். இதை மைனர் ஆப்ரேசன் என சொல்வதற்கு காரணம், இந்த ஆப்ரேசனுக்கு தையல் போடுவதில்லை.மற்றொன்று கட்டு பிரித்த பிறகு ஆப்ரேசன் செய்த தளும்பும் இருப்பதில்லை. மயக்க மருந்து செலுத்த, கொடுக்க கண்களை மூடிக்கொள்ள சொல்லி விட்டு குளோரோஃபாரம் ஸ்பிரே செய்தார்கள். அப்பொழுது எவ்வளவு நேரம் மயக்கமடையாமல் என்னால் தாக்கு பிடிக்க முடிகிறது என்று சோதித்து பார்க்க நினைத்து மூச்சை அடக்கிக் கொண்டேன். ஆனால் வாய்யைத் திறந்து வைத்திருந்தேன் .வாயில் விழுந்த மயக்கமருந்து துளிகள் சிறிது இனிப்பாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதாக உணர்ந்தேன். அதை விழுங்கி விட்டதினால் சிறிது நேரத்தில் மயக்கம் வந்து விட்டது. நான் செய்த குறும்பினால் மயக்க மருந்து அதிகமாக கொடுத்திருக்கிறார்கள். மயக்கம் தெளியவும் நேரமாகிவிட்டதாகவும், உனக்கு மயக்கம் வராததால் அதிக மயக்க மருந்து செலுத்தியதற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தார்களெனவும் மயக்கம் நன்றாக தெளிந்து பேசிக்கொண்டிருக்கும் போது அப்பா சொன்னார்கள். நான மூச்சை அடக்கிக் கொண்ட விசயத்தை அவரிடம் சொல்ல வில்லை. இந்த நேரத்தில் முன்பாகவே ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயம் என்னுடைய வயது ஒன்பது அல்லது பத்து. ஆப்ரேசன் தியேட்டரில் படுக்க வைத்தபிறகு ஆப்ரேசனுக்கு முன்னேற்பாடுகள் செய்ய வந்த நர்ஸ் என்னுடைய ஆணுருப்பை சுண்டி விட்டபடி ' என்ன மிளகாய் போல் இத்துணூண்டு இருக்கிறது என கேலிசெய்ததையும் மறக்க முடியாதது. ஆப்ரேசனுக்கு பின் கால் நீட்டுவதில் பிரச்சனை இல்லையே தவிர, சக்தி குறைந்தது போல உணர்ந்தேன். காலை பலவிதங்களில் வளைப்பதற்கு ஏற்றதாக மாறிவிட்டது. யோக செய்வது போல சப்பணமிடுவதற்கும், கழுத்துக்கு, முதுகுக்கு பின் என காலை கைகளால் எடுத்து வளைத்து போட்டுக் கொள்ள வசதியாகி விட்டது. இங்கு வருவதற்கு முன்பாகவே கழுத்து வரை கவசம் போல பூட்ஸ் அணிந்ததைப் பற்றி கூறியிருக்கிறேன். மைனர் ஆப்ரேசனுக்கு பிறகு ஒரு நாளில் பூட்ஸ் கொடுத்தார்கள். அந்த அனுபவங்களை அடுத்ததில் பார்ப்போமா!.....

1 comment:

vetha (kovaikkavi) said...

very heard experience......
vetha.Elangathilakam
Denmark.