Sunday, January 18, 2009

எனக்கும் -32

என் பெரிய பொழுது போக்குகள் சில இருந்தன. இரவுகளில் நடமாட்டமில்லாத நான்கு பகுதிகள் இருந்தன. நான் தங்கிருந்த ஹாலிலும், பக்கத்தில்லுள்ள சின்ன ஹாலிலும் பால்கனிகளும், மாடியிலிருந்து கீழ்பகுதிக்கு வர இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பாலம் போன்ற நடைப்பாதையின் இரு பக்கமும், அடுத்து அதை ஒட்டியிருக்கும் கட்டடத்தின் முதல்மாடியான உடற்பயிற்சி கூடத்தின் நடைபாதையின் இருபக்க தடுப்பு சுவரும், கீழே பிரதான கேட்டை நோக்கிய வாசல் ஆகியவை நான் தன்னந்தனியாக வெளியுலகை காண பயன் பட்ட இடங்களாகும். பகல் என்றால் போக்குவரத்தும், கட்டடம் மற்றும் மற்றவர் வேலை செய்வதையும், வானத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதும், இரவுயெனில் வானத்தையும், காற்று, அதனால் ஏற்படும் இயற்கை அசைவுகளையும், கண்ணுக்கு காதுக்கு புலப்படக் கேடக கூடிய ஒளி ஒலிகளை பார்த்தும் செவிமடுத்துக் கொண்டிருப்பதும் எனது பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். தவிர இரும்பு சக்கர நாற்காலி, மடக்க கூடிய வகை சக்கர நாற்காலி இதில் எது கிடைக்கிறதோ அதில்,  ஆங்கில எழுத்து ''வீ'' முறையில் இருக்கும் சருக்கு பாதையில் தனியாக வேகமாக கீழே இறங்குவதும், ஊனமுற்றவர் பிடித்து நடைபழக ஊன்றுகோள்கள் இருப்பது போல  வாக்கர் என்று '' பா'' வடிவில் ஒன்றிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதன் நான்கு முனைகளிலும்  சக்கரங்கள் பொருத்தபட்டிருக்கும். ஒருகாலில் சக்தி சிறிது இருந்ததால் அதை ரோலிங்க் ஸ்கேட்டிங் போல வேகமாக உந்தி விட்டு, காலை கீழே ஊன்றாமல் சாய்ந்து அல்லது ஒரு பக்கமாக அமர்ந்துக் கொண்டு, ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு வேகமாக செல்வது, படிகளின் கைப்பிடி சுவற்றில் வழுக்கிக் கொண்டு வருவதும்,  யாருமே இல்லாத நேரத்தில் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக உடற்பயிற்சி கூடத்தின் கதவுகளை மூடிக்கொண்டு, சைக்கிள் பெடலிங், உட்கார்ந்தபடியே கயிற்றை இழுத்து உயரத்தூக்ககூடிய வெயிட்லிஃப்ட்யை இழுப்பதும், கைகளால் தூக்கக் கூடிய வெயிட்லிஃப்ட்களை தூக்கி பயிற்சி செய்வதும், பில்லப்ஸ் எடுப்பதும் எனது தன்னந்தனியான பொழுதுபோக்குகளாகும். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளென்றால் தவழ்ந்தவாறு ஓடிப்பிடிப்பது, கண்ணைக் கட்டிக் கொண்டு தொடுவது, கட்டில்களின் இடையே பக்க தடுப்புகளைப் பிடித்து தொங்கியவாறு ஆடுவது, கட்டில்களில் போடப்பட்டிருக்கும் தடுப்புகளை கழட்டாமலே கட்டிலிலிருந்து கீழே இறங்குவது,மேலே ஏறுவது, கட்டிலிலும் தரையிலும் குட்டிகரணங்கள் போடுவது, சப்பணமிட்டவாறு தலை கீழாக நடப்பதுடன், அவ்வாறே சாய்தளத்திலும், படிகட்டுகளிலும் இறங்குவதும், மற்றும் சில சிறு வயது விளையாட்டுகளும் மறக்க முடியாதவையாகும். அந்த வயதின் சாதனையாக கதுவது சாய்தளத்தில் தன்னந்தனியாக சக்கரநாற்காலியில் அமர்ந்தபடி இறங்குவது. அப்படி இறங்கும்போது இரண்டு முறைதான் முன்பக்க சுவர்களில் நிலைத்தடுமாறி மோதியிருக்கிறேன். நன்றாக நடக்க கூடிய பெரியவர்கள் கூட அப்படி இறங்க துணியமாட்டார்கள். கீழ்தளத்தில் வெளிவாசலுக்கு வருகின்ற சிறிய சாய்தளத்தில் கூட நோயாளிகளை அமர வைத்து பின்பிறமாகதான் இறக்குவார்கள், இறங்குவார்கள். அடுத்து அங்கு பணிபுரிந்தவர்களைப் பற்றி பார்போமா

3 comments:

Anonymous said...

ஆசைதான் பதிவில் ஜமாய்துக் கொண்டிருக்கிறீர்களே. ஆந்திர மகிளா சாப அனுபவங்களை நன்கு பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

Dhavappudhalvan said...

sinna vayadhu njabagangaL pasumaraththAniyaay.

vetha (kovaikkavi) said...

சொல்லுங்கள் மேலும் கேட்போம். விடா முயற்சியின் அனுபவங்கள் தானே!...